Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடந்த மே மாதம் தீவிர உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடியில் 10,000 பேர்

July 1, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் உணவு உண்ணும் அளவு குறைவு | உலக உணவுத்திட்டம்

இவ்வாண்டு மே மாதம் நாடளாவிய ரீதியில் 3.9 மில்லியன் மக்கள் பகுதியளவிலான உணவுப் பாதுகாப்பின்மைக்கும், 10,000 பேர் தீவிர உணவுப் பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்துள்ளனர்.

உலக உணவுத்திட்டத்தினால் கடந்த மேமாதம் மேற்கொள்ளப்பட்ட உணவுப்பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டிலேயே மேற்குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மேமாதம் 3.9 மில்லியன் மக்கள், அதாவது நாட்டின் மொத்த சனத்தொகையில் 17 சதவீதமானோர் பகுதியளவிலான உணவுப்பாதுகாப்பின்மைக்கும், 10,000 பேர் தீவிர உணவுப்பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு மேமாதம் 6.2 மில்லியன் மக்கள் பகுதியளவிலான உணவுப்பாதுகாப்பின்மைக்கும், 66000 பேர் தீவிர உணவுப்பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்திருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலைவரம் முன்னேற்றமடைந்துள்ளது.

பெருந்தோட்டப்பகுதிகளிலேயே உணவுப்பாதுகாப்பின்மை வீதம் உயர்வாகப் பதிவாகியிருப்பதுடன், அங்கு பெரும்பாலான குடும்பங்கள் தமது பிரதான வருமானத்துக்கு சமுர்த்தி, விசேட தேவையுடையோருக்கான உதவிக்கொடுப்பனவு போன்ற சமூகப்பாதுகாப்பு உதவித்திட்டங்களிலேயே தங்கியுள்ளன.

அதேபோன்று, தமது உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக வாழ்வாதார அடிப்படையில் பல்வேறு மாற்றுவழிகளைக் கையாளும் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மேமாதம் 48 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது இவ்வருடம் மார்ச் மாதத்தில் 62 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. குறிப்பாகக் கடந்த மேமாதத்தில் 36 சதவீதமான குடும்பங்கள் தமது உணவின் அளவை சுருக்கியிருப்பதுடன், 19 சதவீதமான குடும்பங்கள் உணவு வேளையைத் தவிர்த்துள்ளன. 

இவ்வாறு பொருளாதார நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் உலக உணவுத்திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உணவு விநியோக மற்றும் பாடசாலை உணவு, போசணை உதவி வழங்கல் செயற்திட்டத்தின் ஊடாக இதுவரையில் 763,808 பேருக்கு உணவுப்பொருள் உதவிகளும், 610,172 பேருக்கு காசோலை உதவியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post

நாட்டை மீட்டு எடுக்க ஐந்து ஆண்டுகள் போதும்: மைத்திரிபால சிறிசேன

Next Post

12 ஆவது இந்துக்களின் பெருஞ்சமரில் யாழ். இந்து கல்லூரி ஆதிக்கம்

Next Post
12 ஆவது இந்துக்களின் பெருஞ்சமரில் யாழ். இந்து கல்லூரி ஆதிக்கம்

12 ஆவது இந்துக்களின் பெருஞ்சமரில் யாழ். இந்து கல்லூரி ஆதிக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures