Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரித்தானியாவில் கார் விபத்து | கனடாவில் வசிக்கும் யாழைச் சேர்ந்த 3 பெண்கள் பலி, நால்வர் காயம்

June 14, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பிரித்தானியாவில் கார் விபத்து | கனடாவில் வசிக்கும் யாழைச் சேர்ந்த 3 பெண்கள் பலி, நால்வர் காயம்

பிரித்தானியாவின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரு கார்கள் மோதி விபத்திற்குள்ளானதில் கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்தில் மேலும் நால்வர் படு காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அடங்குவர்.

10 ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஏ285 வீதியில் சிசெஸ்டர் (Chichester) பகுதியில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

வெள்ளை நிற பிஎம்டபிள்யூ (BMW 220) மற்றும் பழுப்பு நிற மேர்சிடிஸ் (Mercedes C200) ஆகிய இரண்டு கார்கள் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் பிஎம்டபிள்யூ காரில் பயணித்த நால்வரில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்.

மேர்சிடிஸ் (Mercedes C200) காரில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சிசெஸ்டர் (Chichester) நகர் அருகே விபத்து நடைபெற்ற Duncton கிராமப் புறத்தில் வீதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டுள்ளதால், கார் விபத்து தொடர்பான நேரடி சாட்சியங்கள் இல்லாததால் பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து பிரித்தானியாச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மகன் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, இவர்கள் பயணம் செய்த பிஎம்டபிள்யூ காரைச் செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் உறவினரான பெண் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Previous Post

2020 – 21 டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது ட்விட்டருக்கு இந்திய அரசு அழுத்தம் தந்தது | முன்னாள் சிஇஓ பரபரப்பு குற்றச்சாட்டு

Next Post

பிரேதப்பெட்டியில் சுவாசித்த பெண் | ஈக்குவடோரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Next Post
பிரேதப்பெட்டியில் சுவாசித்த பெண் | ஈக்குவடோரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

பிரேதப்பெட்டியில் சுவாசித்த பெண் | ஈக்குவடோரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures