Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உள்நாட்டு கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை – பந்துல

May 9, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொரோனாவால் அமெரிக்கா கடுமையாக பாதிப்புற்றாலும் அமெரிக்கர்கள் பைடனை இராஜிநாமா செய்யுமாறு கூற மாட்டார்கள் -பந்துல

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதோடு , எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மா உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் கைவசம் உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் தவறான செய்திகள் வெளியாவதாக மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மூலப்பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்து , உள்நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்கள் உள்ளன. நீண்ட காலமாக இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையிலேயே இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கு சுங்க வரி அறவிடப்படுகிறது. எவ்வாறிருப்பினும் இது குறித்து இரு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதானிகளையும் தொடர்பு கொண்டு வினவிய போது எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மா கையிருப்பில் உள்ளதாக  அவர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலை ஒரு சதமேனும் அதிகரிக்கவில்லை. இறக்குமதி செய்யப்படும் மாவின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் போது , பொருட்களின் விலைகளும் அதிகரிப்படுகின்றமை வழமையானதாகும் என்றார்.

Previous Post

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்குவது அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல

Next Post

வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை ஈரான் தூக்கிலிடுகிறது: ஐநா

Next Post
வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை ஈரான் தூக்கிலிடுகிறது: ஐநா

வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை ஈரான் தூக்கிலிடுகிறது: ஐநா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures