Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்யும்

May 5, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எதிர்வரும் சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை!

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மேல், சப்ரகமுவ, வடமேல் தென், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

பிற இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு (40-50) கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகள்:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (மே 06) முதல் குறைந்த தாழமுக்கம் உருவாக வாய்ப்புள்ளது.

எனவே, இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால கணிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதற்கிடையில், இந்த குறைந்த அளவிலான வளிமண்டல குழப்பத்தின் விளைவாக, அடுத்த வாரம் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற இந்திய மாநிலங்களை மோச்சா சூறாவளி தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் மே 8 முதல் மே 11 வரை நாட்டின் கிழக்கு கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (25-35) கிலோமீற்றர் வரை காணப்படும்.

பேருவளையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

பேருவளையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சிறிதளவு முதல் மிதமானது வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Previous Post

புத்தர் சிலைக்கு அடியில் கைவிடப்பட்ட நிலையில் சிசு | வத்தேகமவில் சம்பவம்

Next Post

சூடானிலிருந்து இதுவரை 6073 பேர் சவுதியை வந்தடைந்தனர்

Next Post
சூடானிலிருந்து இதுவரை 6073 பேர் சவுதியை வந்தடைந்தனர்

சூடானிலிருந்து இதுவரை 6073 பேர் சவுதியை வந்தடைந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures