Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பீரிஸுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை : பொதுஜன பெரமுன

April 22, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை இல்லை – ஜி.எல்.பீரிஸ்

பொதுச்சபை கூட்டத்தில் தவிசாளர் பதவிக்கு புதிய பெயர் பரிந்துரைக்கப்படாத நிலையில் உதுராவெல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டார். ஜி.எல்.பீரிஸூக்கு எதிராக குற்றச்சாட்டுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற கட்சியின் வருடாந்த பொதுச்சபை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா ஜாதிக பெரமுன என்ற கட்சி 2016 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்று பதிவு செய்யப்பட்டது.பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தவிசாளராக நியமிப்பதற்கு அதுவரை காலம் கட்சியின் தவிசாளராக பதவி வகித்த சிரேஷ்ட பேராசிரியர் உதுராவெல தம்மரதன தேரர் பதவி விலகினார்.

கருத்து வேறுபாடுகளினால் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை.2023 ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தின் போது புதிய தவிசாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

பொதுச்சபை கூட்டத்தில் தவிசாளர் பதவிக்கு பிறிதொரு தரப்பினரது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.சிரேஷ்ட பேராசிரியர் உதுராவெல தம்மரதன தேரரின் பெயர் பரிந்துரைக்கு கட்சியின் உறுப்பினர்கள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்தனர்.

பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்கள் எம்முடன் மீண்டும் இணையலாம்.அரசியலில் நீண்ட கால எதிரியும் இல்லை,நிலையான நண்பனும் இல்லை என்றார்.

Previous Post

6 ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் கோரல்

Next Post

தமிழ், சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் எந்தவொரு குடிமகனும் சேவைகளை கோர முடியும்

Next Post
எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அரசாங்கம்

தமிழ், சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் எந்தவொரு குடிமகனும் சேவைகளை கோர முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures