Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆபத்தான திருவையாறு சரவணாஸ் பாலத்தை முழுமையாக அகற்ற தீர்மானம்

April 20, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆபத்தான திருவையாறு சரவணாஸ் பாலத்தை முழுமையாக அகற்ற தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருவையாறு பகுதியில் ஆபத்தான நிலையில் காணப்படும் சரவணாஸ் பாலத்தினை முழுமையாக அகற்றவதற்கு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பாலத்தின் ஆபத்தான நிலைமை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஊடகங்களில் வெளிக்கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் 19 ஆம் திகதி புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்றது. 

இக் கலந்துரையாடலில் சரவணாஸ் பாலத்தின் அனர்த்த நிலைமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு  தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இரணைமடு நீர்பாசன பிரதான கால்வாயின் மேலாக கட்டப்பட்டிருக்கும் சுமார் 40வருட பழமையான சரவணாஸ் பாலம் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் காணப்படுவதால், குறித்த பாலத்தின் ஊடாக பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத ஆபத்தான நிலை காணப்படுவதுடன், சீரான நீர்ப்பாசன வழங்கலையும் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இவ்வாறான இடிபாடுகளுடன் காணப்படும் பாலத்தினால் ஏற்படப்போகும் பாரிய ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைவாக பாலத்தை முழுமையாக அகற்றுவதாக முடிவு எட்டப்பட்டுள்ளது. பாலத்தை அகற்றுவதற்கான முழு பொறுப்பினை நீர்ப்பாசன திணைக்களம் ஏற்றுக்கொண்டது.

மேலும் புதிய பாலத்தை விரைவாக அமைப்பதற்கான திட்டமொன்றினை விரைவாக தயாரித்து, அதனை நடைமுறைப்படுத்தி விரைவில் புதிய பாலத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில்  மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர் அனர்த்த முகாமைத்துவ பிரிவு,பொலிஸ் அதிகாரி, கரைச்சி பிரதேச சபை செயலாளர், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், கமநலச் சேவை அதிகாரிகள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு எதிராக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

Next Post

அசோக்செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Next Post

அசோக்செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures