Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரச உத்தியோகத்தர்களுக்கான நிவாரணம் குறித்த யோசனை நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும்

April 4, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொரோனாவால் அமெரிக்கா கடுமையாக பாதிப்புற்றாலும் அமெரிக்கர்கள் பைடனை இராஜிநாமா செய்யுமாறு கூற மாட்டார்கள் -பந்துல

வருமான வரி அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு , அரச உத்தியோக்கதர்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை வழங்க முடியுமெனில் அது தொடர்பான யோசனை அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வருமான வரி தொடர்பில் தொழிற்சங்கங்கள் அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துரையாடியிருந்தன.

எனினும் சர்வதேச  நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்ட போது , குறிப்பிட்டளவு வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் வரி தொடர்பில் இணங்க வேண்டியேற்பட்டது.

எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த கட்ட கலந்துரையாடல் இடம்பெறும் போது , அரச உத்தியோகத்தர்களுக்கு ஏதேனுமொரு நிவாரணத்தை வழங்க முடியும் எனில் அதாவது கொடுப்பனவுகள் உள்ளிட்டவை தொடர்பான யோசனையை அரசாங்க தரப்பில் முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவைக்கும் விளக்கமளித்தார். காரணம் எமது தேவைக்கு ஏற்ப அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது.

இவ்வாறு வருமான வரி செலுத்த வேண்டிய குழுவில் உள்ளடங்காத பலர் உள்ளனர். இவ்வாறனவர்களையும் வரி செலுத்தும் குழுவில் உள்ளடக்கினால் சிறியளவானோரிடம் அதிக வரி அறவிடுவதற்கு பதிலாக , பெரும்பாலானோரிடம் நியாயமான வரியை அறவிட முடியும் என்றார். 

Previous Post

வடமாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிராக வி.மணிவண்ணன் வழக்குத் தாக்கல்

Next Post

முன்னாள் உலக குத்துச்சண்டை சம்பியன் அமீர் கானுக்கு 2 வருடத் தடை

Next Post
முன்னாள் உலக குத்துச்சண்டை சம்பியன் அமீர் கானுக்கு 2 வருடத் தடை

முன்னாள் உலக குத்துச்சண்டை சம்பியன் அமீர் கானுக்கு 2 வருடத் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures