Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர்களுடைய பூர்வீக காணிகளை அபகரிப்பதுஅரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் | வினோ எம்.பி

March 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
உலகிடம் ஆயுதம் கேட்டீர்கள் இப்போது கடன் கேட்கின்றீர்கள் உரிமையை இந்தியாவிடம் கேட்பதில் என்ன தவறு? | வினோ

தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலே என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அதனோடு இணைந்த பிரதான சூலாயுதம் அதனோடு ஏனைய விக்கிரகங்கள் பிடுங்கப்பட்டு எறியப்பட்ட விடயத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். 

நீண்ட காலமாக சைவ மக்களினால் அப் பிரதேச மலைப்பகுதி புனித பிரதேசமாக  வழிபடப்பட்டு வந்த ஆலயம். திட்டமிட்ட வகையிலே அரசாங்கத்தின் முகவர் அமைப்புக்களினால் புனித தலம் இடித்தழிக்கப்பட்ட மிகவும் மோசமான செயலை கண்டிப்பதோடு எதிர்காலத்திலே இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாக இருந்தால் அல்லது அரசாங்கத்தின் முகவர் அமைப்புகளினால் செயற்படுகின்ற குறிப்பாக தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா ஏனைய மகாவலி எல் வலயம் இப்படியாக அரசாங்கத்தின் முகவர் அமைப்புகள் தமிழர் பகுதிகளில் குறிப்பாக வட கிழக்கு தாயக பிரதேசங்களில் திட்டமிட்டு நில அபகரிப்பை இது போன்ற அமைப்புக்களின் ஊடாக மேற்கொள்வதனை கண்டிக்கின்றோம்.

தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே வருகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக கண்டன குரல்களை நாங்கள் மட்டுமல்ல சர்வதேசமும் இவ் விடயத்தில் தலையிட்டாலும் அரசாங்கம் இதனை பற்றி செவி சாய்ப்பதாகவே இல்லை.

இவ் விடயங்களை தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் ஏறக்குறைய 330 பிரதேசங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அதிலும்  வடமாகாணத்தில் மட்டும் 167 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடமாக பிரகடனப்படுத்தி அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

அதேபோல் தான் ஏனைய திணைக்களங்களும் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவே இருக்கின்றது. 

இதில் அரசாங்கம் சம்மந்தப்படவில்லை என கூற முடியாது. அரசாங்கத்தின் ஆசிர்வாதத்தோடு, அனுசரனையோடு தான் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

வெடுக்குநாறி மலையில் உள்ள சைவ அடையாளங்கள் திட்டமிட்ட வகையிலே இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது. மிலேச்சத்தனமான மிகவும் கொடுங்கோல் ஆட்சியினுடைய வெளிப்பாடாக தான் இருக்கிறது. 

இதனை இனங்கண்டு சம்பந்தப்பட்டவர்கள் யார், தொல்பொருள் திணைக்களமாக இருக்கலாம் அவர்களை பாதுகாக்கின்ற பாதுகாப்பு படையாக இருக்கலாம் முழுமையான விசாரணை நடைபெற்று இதன் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 

நாளை 30 ஆம் திகதி கண்டன பேரணிக்கு வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆதரவு வழங்க இருக்கின்றோம். வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.

Previous Post

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் – சுமந்திரன்

Next Post

இறக்குமதியாகும் முட்டைகள் பேக்கரி உற்பத்திகளுக்கு பொருத்தமற்றவை 

Next Post
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி : சவாலுக்குட்படுத்திய மனு ; டிசம்பர்14 இல் விசாரணைக்கு

இறக்குமதியாகும் முட்டைகள் பேக்கரி உற்பத்திகளுக்கு பொருத்தமற்றவை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

June 6, 2026
பெத்தி- திரைப்பட விமர்சனம்

பெத்தி- திரைப்பட விமர்சனம்

June 6, 2026
நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

June 5, 2026
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

June 5, 2026

Recent News

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

June 6, 2026
பெத்தி- திரைப்பட விமர்சனம்

பெத்தி- திரைப்பட விமர்சனம்

June 6, 2026
நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

June 5, 2026
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

June 5, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures