Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் 20 ஆம் திகதி கைச்சாத்தாகும் | மனுஷ

March 16, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் 20 ஆம் திகதி கைச்சாத்தாகும் | மனுஷ

சர்வதேச நாணய நிதித்துடனான ஒப்பந்தம் 20ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இருக்கிறது. அதன் பின்னர் நாடு தொடர்பான நம்பிக்கை சர்வதேச மட்டத்தில் அதிகரிக்கும். அதன் காரணமாக நாட்டுக்கான வருமான வழிகள் அதிகரிக்கும்.

அத்துடன் நாடு டொலர் இல்லாமல் பாதிக்கப்பட்டபோது நாட்டுக்கு அதிகளவில் டொலர் கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயற்பட்டது வெளிநாட்டு முகவர் நிறுவனங்களாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முகவர் நிறுவனங்களை தரப்படுத்தி, அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு 14 ஆம் திகதி புதன்கிழமை மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின் கடன் உதவியை நாங்கள் எதிர்பார்த்தோம்.

தற்போது அதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட இருக்கிறது.

என்றாலும் இதனை தடுப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்.சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கப்பெற்றால், எமது பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமாகும்.

அதேபோன்று எமது நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இதன் காரணமாக வருமான வழிகளும் அதிகரிக்கும்.

அத்துடன் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி டொலர் இல்லாத நிலையிலேயே எதிர்கால அரசியலை கண்டுகொள்ளாமல் தீர்மானம் ஒன்றை எடுத்து, இந்த அமைச்சை பொறுப்பேற்றேன். நான் பொறுப்பேற்கும் போது நாட்டில் 220 டொலர் மில்லியனே அன்னிய செலாவணியே நாட்டில் இருந்தது.

இதனை அதிகரிப்பது பாரியதொரு சவாலாக இருந்தது. மருந்து பொருட்களை இறக்குமதி செய்யக்கூட டொலர் இருக்கவில்லை. இதன்போது 500 டொலர் மில்லியனை நாட்டுக்கு கொண்டுவரும் பிரசாரம் ஒன்றை ஆரம்பித்தோம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களாகும்.

வெளிநாடுகளில் தொழில் செய்துவருபவர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவதற்கு பின்வாங்கி வந்தனர். இதன்போது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் 804 மில்லியன் டொலர்களை அன்னிய செலாவணியாக பெற்றுக்கொள்ள முடியுமாகிறது. வெளிநாட்டு முகவர் நிறுவனங்களின் உதவியாலே இதனை செய்ய முடியுமாகியது. அதனால் அதிக அன்னிய செலாவணிகளை நாட்டுக்கு கொண்டுவரும் இந்த துறைக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் நாட்டில் இருக்கும் பல்வேறு துறைகளுக்கு அரச அனுசரணையில் பல்வேறு வசதிவாய்ப்புக்கள் கிடைக்கின்றன. விவசாயிகளுக்கு உரம் மாநியம் கிடைப்பதுபோல் நாட்டுக்கு அதிக டொலர்களை கொண்டுவரும் துறைக்காக எதிர்காலத்தில் முடியுமான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

அதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த துறையில் மோசடி செய்பவர்களை இந்த துறையில் இருந்து முற்றாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Previous Post

19 வயதான யுவதி பாலியல் துஸ்பிரயோகம் : அநுராதபுரத்தில் இரு இளைஞர்கள் கைது!

Next Post

சுற்றுலாப் பயணிகள் அசௌகரியம் ! தொழிற்சங்க போராட்டம் கவலைக்குரியது | சுற்றுலா பயணிகள் ஒழுங்குபடுத்துனர்கள்

Next Post
சுற்றுலாப் பயணிகள் அசௌகரியம் ! தொழிற்சங்க போராட்டம் கவலைக்குரியது | சுற்றுலா பயணிகள் ஒழுங்குபடுத்துனர்கள்

சுற்றுலாப் பயணிகள் அசௌகரியம் ! தொழிற்சங்க போராட்டம் கவலைக்குரியது | சுற்றுலா பயணிகள் ஒழுங்குபடுத்துனர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures