Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் முன்னாள் அமைச்சர்

March 12, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விவசாயிகளுக்கு விவசாய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (10) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.

இவருக்கு எதிராக மத்துகம நீதிமன்றில்  வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே யு.எல்-402 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி புறப்படவிருந்தார். இருப்பினும், அவர் தனது வெளிநாட்டுப் பயணத்தை இரத்து செய்துள்ளார்.

எவ்வாறாயினும், தனக்கு எதிராக மத்துகம நீதிமன்றத்தினால் அவ்வாறான எந்தவொரு வழக்கோ அல்லது வெளிநாட்டு பயணத்தடையோ விதிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர், குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னர் தடை விதித்திருந்த நிலையில் நீதிமன்றம் வழக்கு விசாரணைகளின் பின்னர் குறித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், தரவு அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாகவே இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நாளை திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவரை விசாரணைகள் முடியும் வரை பணி இடைநிறுத்தம் செய்ய குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினரின் தரவுகள் தொடர்பான முறைமையில் ஏற்பட்ட தவறுகளை திருத்தி, வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபர் தப்பியோட்டம்

Next Post

மெத்யூஸின் சதம் இலங்கைக்கு சிறு நம்பிக்கை

Next Post
மெத்யூஸின் சதம் இலங்கைக்கு சிறு நம்பிக்கை

மெத்யூஸின் சதம் இலங்கைக்கு சிறு நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures