Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தலைக்கவசத்தால் தாக்கி குடும்பஸ்தர் கொலை | கைதான 3 சிறுவர்களும் தடுப்பில்

February 16, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தினால் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட16 வயதான மாணவர்கள் மூவர் கைதாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் அன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய மாணவர் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 14 ஆம் திகதி வீட்டின் அருகே உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குறித்த நபர் அதிவேகமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் சென்ற மாணவர்களை எச்சரித்ததில் இந்த தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்தேகநபர்கள் தலைக்கவசத்தினால் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

இதன் போது, பலத்த காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதேவேளை, குறித்த 3 மாணவர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன் சந்தேகநபர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு மதுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மாகொல பிரதேசத்திலுள்ள சிறுவர் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Previous Post

மின்கட்டண அதிகரிப்பு | 31- 60 அலகிற்கான புதிய கட்டணம் 2,278 ரூபா – முழுமையான விபரம்

Next Post

சுவீடன், பின்லாந்து நேட்டோவில் இணைவதை துருக்கி அங்கீகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது | நேட்டோ தலைவர்

Next Post
சுவீடன், பின்லாந்து நேட்டோவில் இணைவதை துருக்கி அங்கீகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது | நேட்டோ தலைவர்

சுவீடன், பின்லாந்து நேட்டோவில் இணைவதை துருக்கி அங்கீகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது | நேட்டோ தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures