Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

துருக்கி – சிரியா பூகம்பம் | உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்தது

February 12, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
துருக்கி – சிரியா பூகம்பம் | உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் தாக்கியது. ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த பூகம்பம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

Pic/FP

இந்த பூகம்பம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த பூகம்ப பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலக நாடுகள் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன.

பூகம்பம் ஏற்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் , தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மொத்த உயிரிழப்பு 24 ஆயிரத்தை கடந்துள்ளது என சிட்னி மார்னிங் ஹெரால்டு என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

Previous Post

இந்தியாவின் ஆடை தொழில்நுட்ப ஏற்றுமதி 28.4 வீதமாக அதிகரிப்பு

Next Post

அஷ்வினின் சுழல்பந்துவீச்சு, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் பட்டேலின் சகல துறை ஆட்டத்தினால் இந்திய அணி‍ அபரா வெற்றி

Next Post
அஷ்வினின் சுழல்பந்துவீச்சு, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் பட்டேலின் சகல துறை ஆட்டத்தினால் இந்திய அணி‍ அபரா வெற்றி

அஷ்வினின் சுழல்பந்துவீச்சு, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் பட்டேலின் சகல துறை ஆட்டத்தினால் இந்திய அணி‍ அபரா வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures