Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

January 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி : சவாலுக்குட்படுத்திய மனு ; டிசம்பர்14 இல் விசாரணைக்கு

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் விவகார அதிகார சபை கடந்த 20ஆம் திகதி முட்டை விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் காணப்பட்டது.

இருப்பினும் வர்த்தமானி அறிவித்தலையும் மீறி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை அண்மையில் நாடாளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

அதன்படி தெஹிவளையில் பகுதியில் கட்டுப்பாட்டு விலையையும் மீறி அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த வர்த்தக நிலையத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் கொழும்பு பிரதேசங்களுக்கு முட்டைகளை கொண்டு வந்து விநியோகிக்கும் பிரதான வர்த்தக நிறுவனத்திற்கும் மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மற்றும் சில்லறை முட்டைகளை விற்பனை செய்யும் கடையொன்றிற்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நிச்சயம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

நாங்கள் ஒரு நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும். எனினும் எங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் அனுமதி கிடைத்தால் முட்டையை இறக்குமதி செய்வோம் என்றார்.

Previous Post

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய 24 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்.

Next Post

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

Next Post
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures