Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக தொடர்ந்தும் இருப்பேன் பதவியின் இறுதி நாளில் ஜெசிந்தா ஆர்டென் உருக்க உரை

January 24, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக தொடர்ந்தும் இருப்பேன் பதவியின் இறுதி நாளில் ஜெசிந்தா ஆர்டென் உருக்க உரை

நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து ஜெசின்டா ஆர்டன் இன்று பிரியாவிடை பெற்றுள்ளார்.

பதவியின் இறுதி நாளான இன்று தனது மௌரி இன மக்கள் மத்தியில் ஆற்றிய உரையில் நியூசிலாந்து மக்கள் தன்மீது செலுத்திய கருணை பச்சாதபம் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக இருப்பதற்கு தயார் என ஜெசின்டா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியின் இறுதி நாளான இன்று அவர் மயோரி இனத்தை சேர்ந்த பெரியவர்கள் அரசியல்வாதிகள் சகிதம் ரட்டன என்ற நகரிற்கு அவர் விஜயம் மேற்கொண்டார் அங்கு அவரை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டனர்.

எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியத்தை அளித்தமைக்காக இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி என ஜெசிந்தா ஆர்டென் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கொரவெய் என அழைக்கப்படும் மாவேரி இனமக்களின் உடையில் காணப்பட்ட அவர் பான்ட் வாத்தியங்கள் இசைக்க தனது கட்சியின் உறுப்பினர்களுடன் மைதானமொன்றிற்கு சென்றார் அங்கு அவரின் சமூகத்தை சேர்ந்தவர்கள் புகழாரம் சூட்டும் விதத்தில் உரையாற்றினார்கள்.

அன்பு செலுத்துவதற்கு இவ்வளவு விரைவாக கற்றுத்தந்தமைக்கு நன்றி என ஒருவர் தெரிவித்தார்.

நான் இங்கு உரையாற்றும் எண்ணத்துடன் வரவில்லை என ஆர்டென் தெரிவித்த போதிலும் அங்கு காணப்பட்டவர்கள் அவரை உரையாற்றுமாறு கேட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய ஜெசிந்தா ஆர்டென் நியுசிலாந்து மக்கள் நியுசிலாந்திற்கான எனது ஒட்டுமொத்த பணி அன்பு பச்சாதபம் கருணை ஆகியவையாக காணப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

நான் பல விடயங்களிற்கு தயார் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராகவும் சகோதரியாகவும் தாயாகவும் விளங்குவதற்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமை சதிவேலையாக இருக்கலாம் | அமெரிக்கா கூறுகிறது

Next Post

ஐசிசியின் 2022க்கான இருபது 20 அணியில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க

Next Post

ஐசிசியின் 2022க்கான இருபது 20 அணியில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures