Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொலைபேசியில் வரும் ஆபத்து | இலட்சக்கணக்கான பணத்தொகையை இழக்கும் நிலை

January 21, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தொலைபேசியில் வரும் ஆபத்து | இலட்சக்கணக்கான பணத்தொகையை இழக்கும் நிலை

பிரபல தொலைபேசி வலையமைப்பு ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி நடத்தப்படும் பாரிய மோசடி நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பணத்தினை இழக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரபல தொலைபேசி வலையமைப்பினால் நடத்தப்பட்ட குலுக்கள் பரிசுப் போட்டியில் தங்களது இலக்கம் வெற்றிப் பெற்றுள்ளதாகவும், மிகப்பெரிய பணப்பரிசினை வென்றுள்ளதாகவும், குறுஞ்செய்தி மூலம் இதனை அறிவித்தபோதும் தாங்கள் இதனை கவனத்திற் கொள்ளவில்லை என்று அந்த மோசடி அழைப்பினை ஏற்படுத்துபவர்கள் தெரிவித்து தங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அதன் பின்னர், பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் காலம் நிறைவடைந்ததன் காரணமாகவும், வரி செலுத்த வேண்டியதன் காரணமாகவும், பரிசுத் தொகையை மீளபெற்றுக்கொள்ள, ஒன்று அல்லது இரண்டு இலட்சம் என்ற குறிப்பிட்ட பணத்தொகை ஒன்றை தாங்கள் கூறும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

அத்துடன், கவர்ச்சிகரமான வார்த்தைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கி, தேசிய லொத்தர் சபை மற்றும் பிரபல தொலைபேசி நிறுவனம் ஆகிவற்றின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால் மக்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு மோசடி

இதேவேளை, மற்றுமொரு மோசடி நடவடிக்கை குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிரபல தொலைபேசி வலையமைப்பின் பெயரைப் பயன்படுத்தி விசேட சீட்டிழுப்பில் உங்களது இலக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன்மூலம் பாரிய விலைக் கழிவின் மூலம் இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதன்காரணமாக, சந்தை விலையில் இருந்து பாதி விலை குறைத்து இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவே, இதற்கான பணத்தினை வைப்பு செய்து இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த அழைப்புக்கள் முற்றிலும் மோசடியானவை என்றும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்துக்கு காரணம் என்ன?

Next Post

பிக்பாஸில் 6ல் இருந்து வெளியேறிய மைனா நந்தினியின் சம்பளம் மட்டும இத்தனை லட்சமா

Next Post
பிக்பாஸில் 6ல் இருந்து வெளியேறிய மைனா நந்தினியின் சம்பளம் மட்டும இத்தனை லட்சமா

பிக்பாஸில் 6ல் இருந்து வெளியேறிய மைனா நந்தினியின் சம்பளம் மட்டும இத்தனை லட்சமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures