பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
2021 க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்குப் பின்னர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதிபெறும் மாணவர்கள் நாளை முதல், அவர்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யலாமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல்
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,“பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதிபெறும் மாணவர்களுக்கு நாளை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் குறித்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற பின்னர் அவர்கள் தேர்ந்தெடுத்த துறை மற்றும் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துக்கொள்ள முடியும்.” என தெரிவித்துள்ளார்.