Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரச அதிகாரிகள் முதுகெலும்புடன் செயற்பட வேண்டும் | பேராயர்

November 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்!

நாட்டு மக்களே வாக்களித்துத் தேர்வு செய்த அரச தலைவர்கள் மக்களுக்கு துரோகமிழைக்கின்றனர்.
அவர்களே நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர் என்று பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம்சுமத்தியுள்ளார்.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து உணர்வுபூர்வமாக சிந்திப்பதில்லை. இதன் காரணமாகவே சர்வதேச நாடுகளிடம் எங்களின் இயலாமையை கூறி கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

முறையற்ற கொள்கை தீர்மானங்கள் காரணமாக நாடு பாரியளவில் பின்னோக்கிச் சென்றுள்ளது. இந்தநிலைமை காரணமாக 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து நாடு மோசமான நிலைமைக்கே சென்று கொண்டிருக்கின்றது.

சட்டம் என்ற கட்டமைப்பு முற்றிலும் சீர்குழைந்துள்ளது. நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோமா? இந்தியாவிற்கும், சீனாவுக்கு, அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அடிபணிந்து அவர்களிடம் கையெந்துகிறோம்.

அதே போன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு தலைசாய்த்து இந்த நாட்டை எவ்வாறான நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். இதற்கு முழுமையான பொறுப்பை அரை போத்தல் சாராயத்திற்கும், 500 ரூபாய்க்கும் வாக்குகளை விற்பனை செய்த அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நிர்வாகம் செய்ய முடியாதவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அரசியலமைப்பு பரிந்துரையை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்தார். அந்த குழு நாட்டில் உள்ள முக்கிய தரப்பினர் யாரிடமும் சென்று பரிந்துரைகளை பெறவில்லை.

அரசியலமைப்பு திருத்த பரிந்துரை குழுவினர் தன்னிச்சையாக தயாரித்த அறிக்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் எதிர்காலம் அதள பாதாளத்திற்கு செல்லும் என்பது திண்ணம்.

அந்த அரசியலமைப்பு பரிந்துரையின் படி யாரேனும் ஒருவர், அரசாங்கத்திற்கு எதிராகவோ, அரச நிறுவனம் ஒன்றுக்கு எதிராகவோ, வெளிநாட்டு அரச தலைவர், ஐக்கிய நாடுகள் சபை அல்லது அது சார்ந்த அமைப்புகளிடம் முறைப்பாடு செய்தால் அவரின் குடியுரிமையை 20 வருடங்களுக்கு குறையாமல் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Previous Post

ஆசிரியர்களுக்கான ஆடை மாற்றப்படாது – சுசில் பிரேம ஜயந்த

Next Post

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

Next Post
நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம் வெளியானது

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures