Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கைதியை கொலை செய்து உணவாக்கிய சக கைதிகள்: அதிர்ச்சி தரும் பின்னணி காரணம்

October 17, 2016
in News, World
0
கைதியை கொலை செய்து உணவாக்கிய சக கைதிகள்: அதிர்ச்சி தரும் பின்னணி காரணம்

கைதியை கொலை செய்து உணவாக்கிய சக கைதிகள்: அதிர்ச்சி தரும் பின்னணி காரணம்

வெனிசுலாவில் ஒரு மாத காலம் தொடர்ந்த சிறை கலவரத்தில் கைதி ஒருவரை கொடூரமாக கொலை செய்து சக கைதிகள் உணவாக்கியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் Táchira Detention Center எனப்படும் சிறையில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கு கொள்ளை சம்பவம் ஒன்றில் தொடர்புடைய கைதி ஜுவான் கார்லோஸ்(25) சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 8-ஆம் திகதி பார்வையாளர்கள் மற்றும் காவலர்கள் என 10 நபர்களை சிறைக் கைதிகளில் சிலர் சிறை பிடித்துள்ளனர். குறிப்பிட்ட சிறையானது வெறும் 120 கைதிகள் மட்டுமே தங்கவைக்க கூடிய வசதிகளுடன் கூடியது. ஆனால் குறித்த சிறையில் 350 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

காவலர்கள் மற்றும் பார்வையளர்களை கடத்திச் சென்ற கும்பலுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் திடீரென்று கலவரம் வெடித்தது. 3 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த கலவரத்தில் மனித மாம்சம் உண்ணும் ஒரு கைதியால் ஜுவான் கார்லோஸ் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு உணவாக்கப்பட்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

மனித மாமிசம் சாப்பிடும் நபர் ஒருவரை கடந்த 1999 ஆம் ஆண்டு குறித்த சிறையில் அடைத்து வைத்திருந்தனர். கலவரத்தை பயன்படுத்திய அந்த நபர் மேலும் 40 சக கைதிகளுடன் இணைந்து ஜுவான் கார்லோஸ் உள்ளிட்ட 3 பேரை சிறைக்குள் வேறொரு பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர்.

அந்த பகுதியில் வைத்து ஜுவான் உள்ளிட்ட 3 பேரையும் கொன்று உணவாக்கியுள்ளனர்.

இச்சம்பவங்களை நேரில் பார்த்த நபர் ஒருவர் இதை ஜுவானின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதே சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜுவானின் தந்தை தமது மகனின் எலும்பு துண்டையாவது தமக்கு அளித்தால் அதை வைத்து மத சடங்குகளை மேற்கொள்வேன் என கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அதிகாரிகளால் இதுவரை அவைகளை மீட்டுத்தர முடியவில்லை.

ஒரு காலத்தில் எண்ணெய் வளம் மிகுந்த நாடாக திகழ்ந்த வெனிசுலா தற்போது பொருளாதார வீழ்ச்சியில் சிக்குண்டு, அடிப்படை உணவுக்கும் பொருட்களுக்கும் பொதுமக்கள் கலவரம் செய்யும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

Tags: Featured
Previous Post

இலங்கை அகதியின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட கம்போடியா..! குடியேறுவதற்கு அனுமதி

Next Post

எழும்புக் கூடுகளுடன் மலேசிய விமானம் கண்டுபிடிப்பு!

Next Post
எழும்புக் கூடுகளுடன் மலேசிய விமானம் கண்டுபிடிப்பு!

எழும்புக் கூடுகளுடன் மலேசிய விமானம் கண்டுபிடிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures