Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாளை முதல் தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும் | தனியார் பேரூந்து உரிமையாளர்

August 28, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
அடுத்தவாரம் முதல் போக்குவரத்தில் ஈடுபடமாட்டாேம் – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் நாளை முதல் தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும்.அதற்கமைய நாடுதழுவிய ரீதியில் தனியார் பேரூந்துகள் 25 சதவீதமளவில் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கி.யு ஆர் முறைமைக்கு கீழ் எரிபொருள் விநியோகம் கடந்த நாட்கள் முறையாக விநியோகிக்கப்பட்டன.தற்போது மீண்டும் எரிபொருளுக்கான வரிசை தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.எரிபொருள் விநியோக கட்டமைப்பில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும்.

அதற்கமைய இன்று முதல் 25 சதவீத பேருந்துகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படமாட்டாது.தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் முறையான நடவடிக்கையினை எடுக்குமாறு வலுசக்தி அமைச்சிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 50 சதவீதமான தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தாமல் உள்ளன.பொருளாதார ரீதியில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு மானிய அடிப்படையில் எரிபொருளை வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Previous Post

அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தம் குறித்து இணக்கப்பாடு ஏற்படுவதை ரஸ்யா குழப்பியது | அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு

Next Post

சம்பியனை உறுதி செய்ய மாத்தறை சிட்டி கழகத்திற்கு ஒரே ஒரு வெற்றி தேவை

Next Post
சம்பியனை உறுதி செய்ய மாத்தறை சிட்டி கழகத்திற்கு ஒரே ஒரு வெற்றி தேவை

சம்பியனை உறுதி செய்ய மாத்தறை சிட்டி கழகத்திற்கு ஒரே ஒரு வெற்றி தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures