Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நெருக்கடியில் திணறும் இலங்கை! | இந்தியாவின் பகிரங்க அறிவித்தல் வெளியானது

March 30, 2022
in News, Sri Lanka News
0
மெய்நிகர் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – நிதி அமைச்சர் பஷில்

இலங்கையின் நெருக்கடியில் சிறந்த அண்டை நாடாக இந்தியா செயற்படுவதாகவும் அதேநேரம் அரசியலில் இருந்து விலகி இந்த நெருக்கடியான சூழலில் உதவுவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பாரதூரமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முயற்சிக்கும் இலங்கைக்கான உதவிகளை விரைவுபடுத்த இந்திய அமைப்பு மேலதிக நேரமாக(ஓவர் டைம்) வேலை செய்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தனது கொழும்பு பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில், சாதாரண வேகத்தில் விடயங்களை செய்ய முடியாது. எல்லாவற்றையும் வேகமாக கண்காணிக்க வேண்டும்.

எனவே இந்தியா கூடுதல் நேரம் வேலை செய்கிறது.

இந்தநிலையில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட 1 பில்லியன் டொலர் கடன் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நெருக்கடியில் நல்ல அண்டை நாடாக இந்தியா செயற்படுகிறது. அதேநேரம் அரசியலில் இருந்து விலகி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

$400 மில்லியன் நாணய பரிமாற்றம், $500 மில்லியன் கடன் ஒத்திவைப்பு, எரிபொருளுக்கான $500 மில்லியன் கடன் மற்றும் ஒரு பில்லியன் டொலர் கடன் வரி என்பவற்றை புதுடில்லி இந்த ஆண்டு இலங்கைக்கு வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை, காணி, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அபிவிருத்தி ஆகிய நான்கு குறிப்பிட்ட விடயங்கள் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது இரு தரப்பினரும் குறிப்பிட்ட, செயற்படக்கூடிய புள்ளிகளை அடையாளம் கண்டு அவற்றில் இணக்கம் கண்டுள்ளனர் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எனினும் இன்னும் உரையாடல் முடிவடையவில்லை என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

இன்று நள்ளிரவுக்கு பின்னரும் தொடரவுள்ள மின்வெட்டு!

Next Post

புதிய உச்சம் தொட்ட தங்க விலை! | தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு

Next Post
கொள்ளையிட்ட நகையை திருப்பி கொடுத்த திருடன்

புதிய உச்சம் தொட்ட தங்க விலை! | தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures