Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீண்ட இழுபறிக்கு பிறகு கோத்தபாய எடுத்த முக்கிய தீர்மானம்!

December 27, 2021
in News, Sri Lanka News
0
நீண்ட இழுபறிக்கு பிறகு  கோத்தபாய எடுத்த முக்கிய தீர்மானம்!

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும், பிரதம அதிபராகவும் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாவார்.

இதேவேளை, பி.பீ. ஜயசுந்தரவின் நடவடிக்கைகள் அண்மைய நாட்களில் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் பி.பீ. ஜயசுந்தர கடுமையாக விமர்சித்திருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தற்போதைய கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அப்போது பி.பீ. ஜயசுந்தரவை பொருளாதார கொலையாளியாக அடையாளப்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகிக்கும் பீ.பி. ஜயசுந்தரவுடன் முரண்பாடுகளை கொண்டுள்ளவர்கள் அவரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அரசியல் ரீதியாக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும், ஜயசுதந்தரவை மீறி ஜனாதிபதியை நெருங்க முடியாமல் இருப்பதே இதற்கு காரணம் எனவும் அரசியல் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அவர் பதவி விலக போகிறார் என ஜயசுந்தரவுக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக அவர்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கட்டுநாயக்க பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Next Post

இலங்கைக்கு பெரும் தொகை நிதியை கடனாக வழங்கும் சீனா!

Next Post
இலங்கைக்கு பெரும் தொகை நிதியை கடனாக வழங்கும் சீனா!

இலங்கைக்கு பெரும் தொகை நிதியை கடனாக வழங்கும் சீனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures