Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்?

December 8, 2021
in News, இந்தியா
0
வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்?

குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த பகுதி குன்னூர் அருகே காட்டேரி எனப்படும் மலைப்பகுதியாகும்.

இங்கு மஞ்சபாசத்திரம் என்ற இடம் உள்ளது. இங்கு தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும். இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்காகவே அரசு தனியாக வீடுகள் கட்டித்தரும். தோட்டங்களை ஒட்டிய பகுதிகளில் இந்த வீடு கட்டப்பட்டிருக்கும். இதை தொகுப்பு வீடுகள் என்பார்கள்.

2 ரூம்கள்தான் இந்த வீடுகளில் கட்டப்பட்டிருக்கும். இப்படி இந்த பகுதியில் 51 வீடுகள் இருக்கின்றன.

தோட்ட தொழிலாளர்கள்

இவர்கள் இங்கேயே தங்கி சுற்றுவட்டார தோட்டங்களில் வேலை பார்த்து வருவார்கள். இன்றும் அப்படித்தான், காலையிலேயே தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது 11.20 மணிக்கு பயங்கர சத்தம் ஒன்று காட்டுப்பகுதியில் கேட்டுள்ளது..

தோட்டத்தை ஒட்டியுள்ள இந்த காட்டுப்பகுதிக்கு ஓடிச் சென்று பார்த்தபோது ஓங்கிஉயர்ந்து காணப்படும் 2 கற்பூர மரங்கள் படபடவென எரிந்து முறிந்து விழுவதை பார்த்துள்ளனர்.

கரும்புகை

முற்றிலும் தீப்பிடித்து அந்த மரங்கள் எரியும்போதே, அந்த பகுதியை சுற்றிலும் கரும்புகை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டதாம்.. இதை பார்த்ததும் அந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர்..

ஆனால், ஆரம்பத்தில் இவர்களுக்கு ஹெலிகாப்டர் விபத்து நடந்தது என்றே தெரியாது.. விபத்து நடந்த பகுதியில்தான் இவர்களின் வீடுகள் உள்ளது என்றாலும், உயிரை கையில் பிடித்து கொண்டு, வீடுகளுக்குள் ஓடிவந்து தஞ்சம் புகுந்துள்ளனர்..

அப்போதுதான், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் 2 டயர்களின் வீல்கள் மற்றும் ஹெலிகாப்டரின் பின்பக்க பகுதியும், அந்த வீடுகளின் வாசலுக்கு அருகிலேயே விழுந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.

ஓட்டு வீடுகள்

ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது முன்பக்க காட்டுப்பகுதி என்றால், மரங்கள் முறிந்து விழுந்தது டீ எஸ்டேட் பகுதியில்.. இந்த தொகுப்பு வீடுகளின் கடைசி வீட்டை ஒட்டியே இந்த காட்டுப்பகுதி ஆரம்பிக்கிறது.. அதனால், இந்த கடைசி வீடு கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது..

இது அனைத்துமே ஓடுவீடுகள் என்பதாலும், முற்றிலும் சிமெண்ட்டினால் கட்டப்பட்டுள்ளதாலும், வீடுகள் முழுக்க கரி படிந்து விட்டன.. அந்த வீட்டின் ஃபேன் இறக்கை ஒன்று கழண்டு கீழே விழுந்துள்ளது..

மருத்துவமனை

இதில் 10 பேரை 80 சதவீத தீக்காயத்துடன் மீட்டுள்ளனர்.. இதில் 2 பேர் அந்த குடியிருப்பு பகுதி அருகில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.. அவர்களுக்கு உயிர் இருந்துள்ளது.. உடம்பெல்லாம் நெருப்பு பற்றி எரிந்த நிலையில் அவர்கள் மயங்கிய கிடந்துள்ளனர்..

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.. ஆனால், 90 சதவீதம் உடம்பு அவர்களுக்கு எரிந்துவிட்டதாம்.. குறிப்பாக, 2 பேருக்குமே வயிற்று பகுதிக்கு கீழ் பகுதி பெரும்பாலும் எரிந்து கருகி விட்டதாக அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள்.

இப்போது இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்..

கட்டுப்பாடு

விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ ஆரம்பித்துவிட்டது.. உடனடியாக அந்த பகுதிகள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுவிட்டன.. பொதுமக்கள், உட்பட யாரையுமே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நெருங்க விடவில்லை..

நீலகிரியில் தற்போது பனிக்காலம் என்பதால், காலையில் இருந்தே அடர் பனிமூட்டம் காணப்பட்டது.. இந்த காலநிலையால்தான், ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Previous Post

சேரனின் கனவை நிஜமாக்கிய ‘ஆனந்தம் விளையாடும் வீடு’

Next Post

41 நாள் ஐயப்பன் விரதத்தில் அடங்கியுள்ள ஐதீகம்

Next Post
41 நாள் ஐயப்பன் விரதத்தில் அடங்கியுள்ள ஐதீகம்

41 நாள் ஐயப்பன் விரதத்தில் அடங்கியுள்ள ஐதீகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures