Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானின் மத நிந்தனை சட்டம் இன அழிப்பிற்கு சமம் – பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் தெரிவிப்பு

July 30, 2021
in News, World
0
பாகிஸ்தானின் மத நிந்தனை சட்டம் இன அழிப்பிற்கு சமம் – பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் தெரிவிப்பு

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மத நிந்தனைச் சட்டங்கள் குறித்த பிரஸ்ஸல்ஸ் பத்திரிகைக் கழகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் அந்தச் சட்டமானது இனச் சுத்திகரிப்புக்குச் சமம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமியம் மற்றும் பாகிஸ்தானின் முஸ்லீம் பெரும்பான்மையினரின் மத உணர்வுத்திறன் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான நிந்தனைச் சட்டங்கள் பொலிஸ் மற்றும் நீதித்துறையால் தெளிவற்ற முறையில் வடிவமைக்கப்பட்டு தன்னிச்சையாக செயல்படுத்தப்படுகின்றன.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் படுமோசமான முறையில துன்புறுத்தப்படுவதுடன் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

ஆனால், இதுபோன்ற நிலைமைகள்  இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டுள்ளதாகவும் அந்த மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான சட்டங்களை ரத்து செய்ய பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் தெய்வ நிந்தனை சட்டத்தின் அடிப்படையிலான இன அழிப்பை நியாயப்படுத்த சட்டங்களின் பயன்பாடு மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் உள்ளிட்ட விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

விவாதத்தைத் தொடங்கி வைத்த  முன்னாள் தெற்காசிய ஜனநாயக மன்றத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பணிப்பாளர் பாலோ காசாடா கூறுகையில் , இது மிக முக்கியமான தலைப்பு மாத்திரமல்ல நீண்ட காலமாக கையாளப்படுகின்ற விடயமும் ஆகும்.

எந்தவொரு அடித்தளமும் இல்லாமல் மக்கள் நிந்தனை குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்றனர்.  இந்த சிக்கலை முன்னிலைப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் அதிகம் விடயங்களை கையாள்வது மாத்திரன்றி செயற்படவும் வேண்டும் கேட்டுக்கொண்டார்.

 

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஐரோப்பிய மக்கள் கட்சியின் சர்வதேச விவகார ஆலோசகர் மானெல் மல்சாமி இதன் போது கூறுகையில் , பாகிஸ்தானில் இடம்பெறும் துன்புறுத்தல்களை எமது பாராளுமன்றம் உட்பட பல அமைப்புகள் கண்டித்துள்ளன.

இந்த சட்டங்களின் கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும்  இந்த சட்டங்கள் எப்போதுமே ஒரு பிரச்சனையாகவே உள்ளதுடன் நாளுக்கு நாள்  நிலைமை மோசமாகின்றன.

பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மத சிறுபான்மையினருக்கு எதிராக இத்தகைய சட்டங்கள்  கடுமையாக பயன்படுத்தப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மறுப்புறம்  முஸ்லீம் நாடுகளில் இதுபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்த பாகிஸ்தான் அழைப்பும் விடுத்துள்ளது. இது மிக மோசமான நிலைமையை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டார்.

மற்றொரு முக்கிய பேச்சாளரான எல்லைகள் இல்லாத மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் வில்லி ஃபாட்ரே குறிப்பிடுகையில் , மத நிந்தனை சட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்த 47 வழக்குகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இவர்களில் 26 கிறிஸ்தவர்கள், 15 சுன்னி முஸ்லிம்கள், 5 அஹ்மதிகள் மற்றும் 1 ஷியா முஸ்லிம் உள்ளதாக குறிப்பிட்டார்.

16 பேருக்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 பேர் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

நான்கு வழக்குகளில் கைதியின் நிலை தெரியவில்லை. 2010 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீபியின் வழக்கில் மரண தண்டனைக்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் பல ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விடுவித்ததாகவும் தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் அவசரகால சட்டத்தை விரிவுபடுத்தும் ஜப்பான்

Next Post

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை

Next Post
24 பேருக்கு எகிப்து மரண தண்டனை

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026

Recent News

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures