Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை – இந்திய அணிக்கிடையேயான முதலாவது ஒருநாள் ஆட்டம் இன்று

July 18, 2021
in News
0
இலங்கை – இந்திய அணிக்கிடையேயான முதலாவது ஒருநாள் ஆட்டம் இன்று

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் நான்காவது பதிப்பான, 2023 ஆம் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றில், இலங்கை இன்று  (18) முதல் முறையாக இந்தியாவை எதிர்கொள்ளும்.

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைனாத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இப் போட்டியானது இரவு – பகல் ஆட்டமாக நடைபெறும்.

சுமார் 2 வருடங்களின் பின்னர் பிரேமதாச மைதானத்தில் அரங்கேறும் ஆட்டம் இதுவாகும்.

நாட்டின் கிரிக்கெட் எதிர்காலத்தை வெற்றிகரமாக மாற்றியமைக்கும் நோக்குடன் இளம் வீரர்களின் திறமைகளை நம்பி, இலங்கை அணி பல புதிய வீரர்களுடன் போட்டிகளில் நுழைகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்கள் இரண்டையும் இழந்து இலங்கை அணி இத் தொடரிலாவது வெற்றியின் பக்கம் திரும்ப வேண்டும்.

இதேவ‍ேளை விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இதனால் ஒரு நாள் மற்றும் டி-20 தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட 2 ஆம் தர இந்திய அணி, இலங்கை்கு எதிராக தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த காத்துள்ளது.

இந்த தொடர் முதலில் கடந்த 13 ஆம் திகதி தொடங்க இருந்தது.

எனினும் இலங்கை அணி ஊழியர்கள் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அதிகரிப்பு காரணமாக 5 நாள் தாமதமாக இப்போது தொடங்குகிறது.

பொதுவாக எமது நாட்டில் போட்டி நடந்தால் இலங்கை அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருக்கும். காரணம் வீரர்கள் உள்ளூர் ஆடுகள சூழலை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஆனால் தற்போது அணியில் போதிய அனுபவம் இல்லாத பல வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து தொடரின் போது உயிர் குமிழி விதிமுறையை மீறி ஒழுக்காற்று பிரச்சினையில் சிக்கிய குசல் மெண்டீஸ், தனுஷ்க குதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து தொடருக்காக அணியின்  தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவும், பினுர பெர்னாண்டோவும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

ஊதிய ஒப்பந்த விவகாரத்தால் சகலதுறை ஆட்டக்காரர் அஞ்சலோ மெத்தியூஸும் பின்வாங்கி விட்டார். இதனால் இலங்கை அணி பலவீனமாக தென்படுகிறது.

மறுபுறம் விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், பும்ரா, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணியில் திறமைக்கு பஞ்சமில்லை.

அடுத்து வரும் டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ஓரிரு இடங்கள் மட்டுமே வெற்றிடமாக இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்கும் முயற்சியுடன் இந்திய இளம் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிக்காட்டும் முனைப்புடன் உள்ளதால் அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஜேர்மன் வெள்ளத்தால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 156 ஆக உயர்வு

Next Post

சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா

Next Post
சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா

சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026

Recent News

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures