Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிப்பு; மக்கள் விசனம்

June 26, 2021
in Sri Lanka News
0
காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிப்பு; மக்கள் விசனம்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பறங்கிக்கமம் பகுதியை அண்டிய பகுதியில் சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாகவும் பல ஏக்கர் காணிகள் தனி நபர்களாலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களாலும் அபகரிக்கப்படுவதாகவும் பறங்கி கமத்தை சேர்ந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யுத்தம் காரணமாக பல முறை இடப்பெயர்வுகளை சந்தித்த தங்களுக்கு அரசாங்கத்தினால் விவசாயம் செய்வதற்கு என இரு ஏக்கர் விவசாய காணிகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு அதற்கு தாங்கள் விண்ணப்பித்ததாகவும் விண்ணப்பித்த தங்களுக்கு வரவில்லை எனவும் தங்கள் பிள்ளைக்கு வந்துள்ளதாகவும் ஆனால் பிள்ளை வயல் செய்யவோ தோட்டம் செய்யவோ இதுவரை காணி வழங்கப்படவில்லை எனவும் பறங்கி கமத்தை சேர்ந்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

இது ஒரு புறம் இருக்க வயல் செய்ய காணி வழங்காவிட்டாலும் வாழ்வதற்கே தற்போது காணி இல்லாத நிலை உருவாகியுள்ளதாக பறங்கி கமம் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்கள் சொந்த பகுதியில் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு எமது பகுதிக்கு அருகில் உள்ள காணிகளை வழங்குவதாகவும் இதனால் எங்கள் பிள்ளைகள் திருமணம் செய்து இருந்தும் பிள்ளைகள் இருந்தும் அவர்களுக்கு ஒரு காணியை பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்

அதே நேரம் இலுப்பைகடவை மற்றும் கள்ளியடி பகுதியில் சட்ட விரோதமாக பல ஏக்கர் காணிகள் அடாத்தாக பிடிக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் ஆதாரங்களுடன் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

எனவே விரைவில் உரிய அதிகாரிகள் நிறுவனங்கள் தலையிட்டு காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Next Post

வவுனியாவில் 200 கிலோ இறைச்சி மீட்பு

Next Post
வவுனியாவில் 200 கிலோ இறைச்சி மீட்பு

வவுனியாவில் 200 கிலோ இறைச்சி மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures