Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

5000 ரூபாய் கொடுப்பனவு – தெமட்டகொடை மக்கள் கவலை

June 11, 2021
in Sri Lanka News
0

நடமாட்ட கட்டுப்பாடுகளால் தொழில்களை இழந்துள்ள மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு இதுவரை கிடைக்கவில்லை என கொழும்பு – தெமட்டகொடை பகுதியில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதிவாழ் மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் பெய்த கடும் மழையால் தமது வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்து பெரும் அசெகரியங்களுக்கு உள்ளாகியுள்ளோம். அதேநேரம் நடமாட்டத் தடை காரணமாக தொழில்களை இழந்துள்ளோம். இதனால் எமது வருமானம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு கூட கிடைக்கவில்லை என அப்பகுதிவாழ் மக்கள் தெரிவித்தனர்.

எனவே பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழும் தமக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் தலையீடு செய்து உரிய கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு அப்பகுதிவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

ஏப்ரல் 21 தாக்குதல் ; மேலும் இருவர் கைது

Next Post

சுகாதார பிரிவினர் வேலை நிறுத்தம்!

Next Post

சுகாதார பிரிவினர் வேலை நிறுத்தம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures