Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மக்களின் தலைவிதி பெரிதாய் மாறி இன்றுடன் 49 ஆண்டுகள்!

May 23, 2021
in News, Sri Lanka News, கட்டுரைகள்
0

May be an image of 4 people

மறக்கமுடியுமா இன்றைய நாளை?

தமிழ் மக்களின் தலைவிதி பெரிதாய் மாறி இன்றுடன் 49 ஆண்டுகள்.

—————————————————-

இலங்கை அரசு முதன்முதலாக, இந்த நாட்டை பௌத்த நாடாக அரசியலமைப்பினூடாகவே பிரகடனம் செய்த நாள் இன்றாகும்!

தமிழர்கள் தாக்கப்பட்டதும் உடமைகள் அழிக்கப்பட்டதும் எரிக்கப்பட்டதும், உயிரோடு தார் ஊற்றிக் கொளுத்தப்பட்டதும் 58 ஆம் ஆண்டின் இன்றாகும்.

ஆயினும் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியலமைப்பினூடகவே தமிழ் மக்களின் வரலாற்றின் தலைவிதி பெரிதான மாற்றத்துக்குள்ளானது 1972 ஆம் ஆண்டின் இன்றாகும்!

சோல்பரி அரசியலமைப்பில் நாட்டின் சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பாயிருந்த 29 ஆம் சரத்தையும் புதிய அரசியலமைப்பின் மூலம் இல்லாமற் செய்த நாள் இன்றாகும்!

சிறுபான்மை மக்களுக்கு ஒரு பாதுகாப்பாகவிருந்த “ சென்ற் சபை” யையும் புதிய அரசியலமைப்பின் மூலம் அழித்த நாள் இன்றாகும்!

தமிழ் மக்கள் காலம் காலமாகி நம்பி தம் மண்ணிலும் வளர்த்துக் காத்த இடதுசாரித் தலைமையே அவர்களைக் கழுத்தறுத்த நாள் இன்றாகும்!

ஐம்பத்தாறில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது “ ஒரு நாடு இரு மொழி; இருநாடு ஒரு மொழி” என்று அரசை எச்சரித்த இடதுசாரித் தலைவர் கொல்வின் ஆர் டி சில்வா இதன் சூத்திரதாரியாகினார்.

இந்த அரசியலமைப்பு “ஒரு புதிய கட்டிடத்திற்கு- ஒரு புதிய அடித்தளத்தை அமைப்பதாவதுடன், இது இந்த நாட்டின் மக்கள் அதனை முற்றாக ஆட்கொள்ளும்…”. என இந்த அரசியலமைப்பைப் பற்றி வர்ணித்தார். (M J A Cooray (1982) Judicial Role under the Constitution of Ceylon/Sri Lanka)

இடதுசாரியான அவர் குறிப்பிட்ட “இந்த நாட்டின் மக்கள்” என்பது தங்களை அல்ல என தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டது இன்றைய நாளிலாகும்.

அங்கிளிக்கன் கிறிஸ்தவத்திலிருந்து அரசியல் அதிகாரத்திற்காக பௌத்தத்திற்கு மாறிய பண்டாரநாயக்க குடும்பம் தமது அரசியல் இருப்பைத் தக்கவைக்க பிறப்பால் கிறிஸ்தவரான கொல்வினை வைத்தே

அரசியலமைப்பின் மூலம் நாட்டை

பௌத்த நாடாகவே பெயரிட்டது இன்று ஆகும்.

ஈழநாடு: 1972 மே 22 இல் வந்த செய்தி வருமாறு:-

“இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவர்கள் தமிழர்கள்.

அத்தகைய தமிழினத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது .

இந்த ஆபத்திலிருந்து எப்படி நாம் தப்புவது? என

ஒவ்வொரு தமிழ் மகனும் சிந்திக்கத்தொடங்கியுள்ளனர்.“

மே 21 அன்று வண்ணை நாவலர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் பற்றிய செய்தி அது.

பெருந்திரளான மக்கள் முன்னிலையில் உரையாற்றிய தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வா

இப்படி மிகுந்த கவலையுடன் உரையாற்றினார்.

பண்டிதர் க பொ இரத்தினம் வாசிக்க “தமிழ்மக்களாகிய நாங்கள் எங்கள் உரிமைகள் கிடைக்கும் வரை- அரசியல் திட்டத்துக்கு ஆதரவு வழங்கமாட்டோம்” என அனைவரும் உரத்த குரலில் சொன்னார்கள்.

தமிழரசுக் கட்சிப் பிரமுகர்களுடன்,

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பிரமுகர்களும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.

நாவலர் மண்டபம் நிரம்பியிருந்ததுடன், அதன் வளவிலும் வீதியிலும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர்.

-வரதராஜன் மரியம்பிள்ளை

 http://Facebook page / easy 24 news
Previous Post

இனிய திருமணநாள் வாழ்த்து

Next Post

இலங்கையில் கொரோனாவுக்கு இதுவரை 1178 பேர் பலி !

Next Post

இலங்கையில் கொரோனாவுக்கு இதுவரை 1178 பேர் பலி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026

Recent News

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures