Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனவரி 1 முதல் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க திட்டம்

December 1, 2020
in News, Politics, World
0

நாட்டில் சுற்றுலாத் துறையினை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

அதன்படி சுகாதார அமைச்சின் COVID-19 மருத்துவ மேலாண்மை நிபுணர் குழு சுற்றுலாத் துறையுடன் இணைந்து அதற்கான வழிகாட்டுதல்களைத் தயாரித்துள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் சர்வதேச பயணிகளுக்காக இரு விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க பரிந்துரைத்துள்ளதாக இலங்கை சுற்றுலாத் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், சுகாதார அதிகாரிகளின் ஒப்புதலுக்கான குறித்த வழிகாட்டுதல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் சாதகமான பதிலுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த நெறிமுறை சுகாதார அமைச்சினால் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்தவகையில் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டல்களுக்கு முன்பதிவு செய்யதல் அல்லது பணம் செலுத்ததுபவர்களுக்கு மட்டுமே விசா வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லெவல் 1 தங்குமிடத்தில், சுற்றுலாப் பயணிகள் வளாகத்திற்குள் தங்கவும், குறிப்பிட்ட விருந்தினர், குடும்பம் அல்லது குழுவினருக்காக பிரத்தியேகமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் கே.பி.எம்.ஜி. சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான தங்குமிடமாக இருக்கும் லெவல் 2 விடுதிகளில் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்,

மேலும் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா தளங்களைப் பார்வையிடவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா தளங்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி திணைக்களத்தின் இணையதளத்தில் கிடைக்கும். 28 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிடங்களை இலவசமாக பதிவுசெய்ய முடியும்.

அத்தோடு நீண்ட கால பயணிகள், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லது இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்கள், சுற்றுலா மற்றும் விளையாட்டு சுற்றுலா விசா வகைகள் என்பன வழிகாட்டுதல்களின்படி பரிசீலிக்கப்படும்.

மேலும் தற்போது ஒரு மாதத்திற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாகவும், மறு அறிவித்தல் வரும்வரை ஒன் அரைவல் விசாக்களை வழங்குவது இடைநிறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழிகாட்டுதல்களில் அனைத்து பயணிகளும் ஒரு உள்ளூர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மாத காலத்திற்கு விசா விண்ணப்ப செயற்பாட்டின் போது ஒன்லைனில் கட்டாய COVID-19 காப்பீட்டைப் பெற வேண்டும்.

ஏனெனில் இலங்கையில் தங்கியிருக்கும் போது எந்தவொரு உடல்நலம் தொடர்பான செலவுகளையும் அரசாங்கம் ஏற்காது என்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையம் என்பன ஊடக போக்குவரத்து மேற்கொள்ளப்படும்.

சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை கருத்திற்கொண்டு ஒரு நாளைக்கு மொத்தம் 300 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை விமான நிலையத்திற்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கட்டாய பி.சி.ஆர் சோதனை அறிக்கை அவசியம்.

நாட்டை வந்தடைந்தவுடன் அன்டிஜென் சோதனை அல்லது பி.சி.ஆர் சோதனை சுகாதார அமைச்சு அல்லது தனியார் மருத்துவமனைகளால் விமான நிலையத்தில் நடத்தப்படும்.

மேலும் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்

அத்தோடு விமான நிலையத்திலிருந்து சான்றளிக்கப்பட்ட ஹோட்டல்களுக்கு பயணிக்கும் பொறுப்பு சான்றளிக்கப்பட்ட ஹோட்டல் அல்லது பயண முகவரால் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

Next Post

ஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி – ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்

Next Post

ஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026

Recent News

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures