Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நாடு கடத்தப்பட்ட குடும்பம்!

August 13, 2016
in News
0
கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நாடு கடத்தப்பட்ட குடும்பம்!

கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நாடு கடத்தப்பட்ட குடும்பம்!

இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Air-Arabia G9501 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய், தந்தை மற்றும் சிறிய பிள்ளை ஒன்றும் போலி கடவுச்சீட்டு மூலம் வருகை தந்துள்ளதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஆர்.டீ.எஸ் குணரட்ணவிற்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தாய் மற்றும் பிள்ளைக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டு இருந்துள்ளதுடன், தந்தைக்கு ஜேர்மன் நாட்டு கடவுச்சீட்டு இருந்துள்ளது.

சந்தேகத்தின் காரணமாக அவர்களின் ஆவணங்களை பரிசோதித்த போது, அவர்களிடம் இரண்டு அகதி கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உதவி கட்டுப்பாட்டாளர் எம்.ஜி.எச் காரியவசம் தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்த இவர்கள் எதிர்வரும் 14ம் திகதி திரும்பிச் செல்ல இருந்ததாகவும், உண்மைத் தகவல்களை மறைத்ததன் காரணமாக அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு ஆதரவானவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்காக சவுதியில் இருப்பது சம்பந்தமான ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதனால் ஆரம்பத் தகவல்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கியதாகவும், இறுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரின் உத்தரவுப்படி அவர்களை நாடு கடத்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.

Tags: Featured
Previous Post

கோடீஸ்வரர்கள் பட்டியலில் தமிழர்!

Next Post

ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கான பாதையாக மாறும் யாழ்ப்பாணம்!

Next Post
ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கான பாதையாக மாறும் யாழ்ப்பாணம்!

ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கான பாதையாக மாறும் யாழ்ப்பாணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures