Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொற்றாளர்கள் மொத்த எண்ணிக்கை 13 ஆயரத்தைக் கடந்தது!

November 8, 2020
in News, Politics, World
0

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சனிக்கிழமை இரவு 10 மணிவரை 445 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இவர்களில் நான்கு பேர் வெளிநாடுகளின் இருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். ஏனைய அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களாவர்.

அதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,933 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 419 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக நான்கு மரணங்கள் பதிவாகியதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையை அடுத்து இன்றைய தினம் கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலையிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடி கிளையொன்றின் ஊழியர்கள் இருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நான்கு மரணங்கள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் இன்று நால்வர் மரணமடைந்திருந்தனர்.

கொழும்பு 10, மாளிகாவத்தையை சேர்ந்த 42 வயது மற்றும் 69 வயதுடைய இரு பெண்களும், வெல்லம்பிட்ய பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும், கனேமுல்லை பகுதியை சேர்ந்த 88 வயது பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 10, மாளிகாவத்தையை சேர்ந்த 42 வயது பெண் தனது வீட்டிலேயே மரணமடைந்திருந்தார். கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு 10, மாளிகாவத்தையை சேர்ந்த 69 வயது பெண் நீண்டகாலமாக நோய்வாய்பட்டு இருந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலினால் மரணமடைந்துள்ளார்.

வெல்லம்பிட்டியை சேர்ந்த 67 வயது ஆண் நீண்டகாலமாக நோய்வாய்பட்டு இருந்துள்ளதுடன் சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிமோனியா காச்சல் காரணமாக அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

மினுவாங்கொடை கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியவரென அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த கனேமுல்லையை சேர்ந்த 88 வயது பெண் சுகயீனம் காரணமாக பல்லேகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அங்கொடை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் மற்றும் குருதி நஞ்சாகியமை காரணமாக மரணமடைந்துள்ளார்.

யூனியன் பிளேசில் பல்பொருள் அங்காடி ஊழியர்களுக்கு தொற்று

கொழும்பு – யூனியன் பிளேசில் அமைந்துள்ள தனியார் பல்பொருள் அங்காடி கிளையொன்றின் ஊழியர்கள் இருவருக்கு சனிக்கிழமை தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பல்பொருள் அங்காடி அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த இரு ஊழியர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஏனைய ஊழியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் , கிருமி நீக்கல் நடவடிக்கைகளுக்காக குறித்த தனியார் பல்பொருள் அங்காடியின் கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய போகம்பரை சிறைச்சாலையிலும் தொற்று

கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 7 கைதிகளுக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துசார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் வெலிகந்தை பிரதேசத்தில் அமைந்துள்ள கொவிட் சிகிச்சைக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறையில் 300 பேருக்கு பி.சி.ஆர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை 30 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அங்கு 300 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் யாருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்ற முடிவு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் குறைவடையாத தொற்றாளர்களின் எண்ணிக்கை

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் அம்மாவட்டத்தில் தொடர்ந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுகின்றனர். வியாழக்கிழமையும் இங்கு 203 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். சனிக்கிழமை மாலை நான்கு மணிவரையான காலப்பகுதியில் 201 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இதே வேளை கொழும்பில் 101 , கொழும்பு மாநகரசபையில் 2, களுத்துறையில் 13, குருணாகலில் 13, கேகாலையில் 18, காலியில் 3, இரத்தினபுரி மற்றும் பதுளையில் தலா 2 , கண்டி, மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, வவுனியா, அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

ஹொரணை ஆடைத் தொழிற்சாலையில் புதிய தொற்றாளர்கள்

ஹொரணை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

5600 க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் ஹொரணை, குருகொட ஆடைத் தொழிற்சாலையில் இதுவரை 159 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் 2,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகளின் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஹொரணை நிர்வாக பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Next Post

மக்களைச் சாகடிக்காதீர்கள்; நாட்டை உடன் முடக்குங்கள்!

Next Post

மக்களைச் சாகடிக்காதீர்கள்; நாட்டை உடன் முடக்குங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures