Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

17 வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் இம்முறை நிறுத்தம்

July 23, 2020
in News, Politics, World
0

கதிர்காம ஆடிவேல் விழாவையொட்டி கடந்த 17 வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக அன்னதான சபையின் இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

கடந்த 17 வருடகாலமாக இந்து கலாசார திணைக்களத்தின் கதிர்காம இந்துயாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரால் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுவந்ததோடு, அதில் பல இலட்சக்கணக்கான பக்த அடியார்கள் பசியாறிவந்தனர். ஆனால் இம்முறை அதனை நடாத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்பதால், அதனை நிறுத்துவதற்கு தீர்மானித்ததாக இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.

இதேவேளை, இந்து யாத்திரீகர் விடுதியும் இம்முறை பக்தர்களுக்கு அல்லாமல் கொரோனாத் தடுப்பு அலுவலர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் கதிர்காமம் மற்றும் உகந்தமலைமுருகனாலய ஆடிவேல் விழாக்காலங்களில் மேற்கொள்ளப்படும் வழமையான விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நாட்டின் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் வெடிபொருள்கள் கண்டெடுப்பு !

Next Post

பேரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

Next Post

பேரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures