Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கருணா பற்றி எழுதினால் பேஸ்புக் முடக்கப்படுவதாக லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து

June 28, 2020
in News, Politics, World
0

இராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா வெளியிட்ட கருத்து தொடர்பில் பேஸ்புக் பக்கங்கள் ஊடாக கருத்து வெளியிட்டால், குறித்த நபரின் பேஸ்புக் கணக்கு தடை செய்யப்படும் என அரசாங்கத்தினால் எச்சரிக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் கருணாவின் கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட நெருக்கமான நபரின் பேஸ்புக் கணக்கிற்கு அவ்வாறு அரசாங்கத்தின் எச்சரிக்கை அடங்கிய தகவல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் மத தலைவர்களுக்கு கருத்து வெளியிடும் முழுமையான சுதந்திர வழங்கப்பட்டது எனினும், தற்போதைய அரசாங்கம் முழுமையாக அந்த சுதந்திரத்தை தடை செய்து வருவதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் தேர்தலில் வாக்குறுதியளித்த ஊடக சுதந்திரம் இதுவா என அரசாங்கத்திடம் கேட்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Previous Post

அரச வங்கிகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு

Next Post

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க திறக்கப்படமாட்டாது

Next Post

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க திறக்கப்படமாட்டாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures