வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி திட்டமிட்ட படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தகவலை விமான சேவைகள் நிறுவன பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பல நாடுகளில் இன்னும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விமான நிலையம் திறக்கும் திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.