காலிக்கு தெற்கான கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான வெளிநாட்டு மீன்பிடி படகொன்று கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காலி கடற்பரப்பின் தெற்கே உள்ள ஆழமான கடற்பரப்பில் கடற்படையினர் நேற்று மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கொடியில்லாது வெளிநாட்டு மீன்பிடி படகு பயணிப்பதை அவதானித்த கடற்படையினர், மேற்படி படகை சுற்றிவளைத்தது மீட்டதுடன், அதிலிருந்த நான்கு சந்தேகநபர்களையும் கைதுசெய்தனர்.
படகிலிருந்து; சுமார் 60 கிலோ போதைப்பொருளும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.காலி கடற்படை தளத்துக்கு படகு எடுத்துவரப்படுவதுடன் 60 கிலோ போதைப் பொருளும் ஹெரோயினாக இருக்கலாம் என கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.