Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

‘401’ நோக்கி இந்தியா

September 3, 2017
in Sports
0
‘401’ நோக்கி இந்தியா

ஒருநாள் போட்டி வரலாற்றில் 400 ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இலங்கைக்கு எதிரான 4வது போட்டியில் தோனி, மணிஷ் பாண்டே சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்த போது இம்மைல்கல்லை எட்டியது. இன்று இந்திய வீரர்கள் ரன் மழை பொழிந்தால், 401வது ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைக்கலாம். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா (366 முறை) உள்ளது.

இந்தியா சார்பில், முதல் விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 94 முறை ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைக்கப்பட்டது. இதில் சச்சின்-கங்குலி ஜோடி அதிகபட்சமாக 258 ரன்கள் (எதிர்-கென்யா, 2001) குவித்தது.

123* ரன்கள்

கடந்த 1975ல் லீட்சில் நடந்த கிழக்கு ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் கவாஸ்கர், பரூக் இன்ஜீனியர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது. இது, ஒருநாள் அரங்கில் இந்தியா சார்பில் பதிவான முதல் ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’.

26 முறை

ஒருநாள் அரங்கில் அதிக முறை 100 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்த ஜோடிகள் பட்டியலில் இந்தியாவின் சச்சின், கங்குலி ஜோடி முன்னிலை வகிக்கிறது. இந்த ஜோடி 176 இன்னிங்சில், 26 முறை ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்தது.

331 ரன்கள்

கடந்த 1999ல் ஐதராபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் சச்சின், டிராவிட் ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 331 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.

அடுத்த இடத்தில் இந்தியாவின் கங்குலி–டிராவிட் (318 ரன்கள், 2வது விக்கெட், எதிர்: இங்கிலாந்து, 1999, இடம்: டான்டன்) ஜோடி உள்ளது.

372 ரன்கள்

கடந்த 2015ல் கான்பெராவில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 372 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற வரலாறு படைத்தது.

அடுத்த இடத்தில் இந்தியாவின் சச்சின்–டிராவிட் (331 ரன், 2வது விக்கெட், எதிர்–நியூசிலாந்து, இடம்: ஐதராபாத், 1999) ஜோடி உள்ளது.

10 முறை

இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லி, ரோகித் சர்மா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், 10 முறை, ‘டபுள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் கோஹ்லி.

3வது முறை

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தது. இது, இந்த ஜோடியின் 3வது ‘டபுள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், அதிகமுறை ‘டபுள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்த ஜோடிகள் பட்டியலில் முதலிடத்தை இந்தியாவின் சச்சின்–கங்குலி, காம்பிர்–கோஹ்லி, இலங்கையின் மகிளா ஜெயவர்தனா – உபுல் தரங்கா ஜோடியுடன் பகிர்ந்து கொண்டது.

Previous Post

முன்னாள் பாகிஸ்தான் வீரருக்கும் தமன்னாவுக்கும் திருமணமா?

Next Post

இந்தியாவின் வெற்றிநடை தொடருமா

Next Post
இந்தியாவின் வெற்றிநடை தொடருமா

இந்தியாவின் வெற்றிநடை தொடருமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தாயக – கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் – சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம்

August 25, 2026
புதுமுக நடிகர் பிரபு ஏகாம்பரம் நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

புதுமுக நடிகர் பிரபு ஏகாம்பரம் நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 25, 2026
வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

August 24, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

August 24, 2026

Recent News

தாயக – கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் – சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம்

August 25, 2026
புதுமுக நடிகர் பிரபு ஏகாம்பரம் நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

புதுமுக நடிகர் பிரபு ஏகாம்பரம் நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 25, 2026
வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

August 24, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

August 24, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures