Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

40 மணி நேரத்தில் 4 குழந்தைகள் மரணம்!

October 2, 2017
in World
0
40 மணி நேரத்தில் 4 குழந்தைகள் மரணம்!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. சேலத்தில் தொடந்து இரண்டு மாதமாக டெங்கு காய்ச்சல் பரவி பலரைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் சிறுவர்களே பலியாகிறார்கள் என்பது பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. நேற்று (01.10.2017) காலை முதல் இன்று (02.10.2017) மதியம் வரை சராசரி 40 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 4 குழந்தைகள் இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மரவனேரி கோர்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த கணேசனின் மகன் ஶ்ரீதர் வயது 14. அவர் வீட்டின் அருகே உள்ள புனிதப்பால் மேல் நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்புப் படித்து வந்தார். நான்கு நாள்களுக்கு முன்பாகக் காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன் அவரின் மகள் அகல்யா வயது 13. முத்துக்காப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்து வந்தார். கடந்த 10 நாள்களாகக் காய்ச்சல் இருந்து வந்தது. அதையடுத்து மூன்று நாள்களுக்கு முன்பு சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

சேலம் ஓமலூர் பொட்டிபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் கூலித் தொழிலாளி இவரின் மகள் ஷாலினி வயது 8. அவர் வீட்டின் அருகிலேயே 4-ம் வகுப்பு படித்து வந்தார். சில நாள்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று விடியற்காலை மரணம் அடைந்தார்.

சேலம் கலரம்பட்டி மெயின்ரோடு பாரதியார் நகரை சேர்ந்தவர் முகமது மொய்தீன். இவரது 9 வயது மகள் ஆயிஷா. 5-ம் வகுப்பு படித்து வருகிறார். தொடர் காய்ச்சல் காரணமாக 4 நாள்களுக்கு முன்பு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார்.

மரணம் அடைந்த ஆயிஷாவின் உறவினர் இப்ராகிம், ”சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் காய்ச்சலால் பல குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை காய்ச்சல் என்று கொண்டு சென்றாலே முதலில் மரணம் அடைந்தால் மருத்துவமனை பொறுப்பில்லை என்று எழுதி கையெழுத்து வாங்கிக் கொள்ளுகிறார்கள். போர்க்கால நடவடிக்கையில் செயல்படக்கூடிய மருத்துவர்கள் சரிவர வருவதில்லை. கவனிப்பு என்பது சுத்தமாகக் கிடையாது. குழந்தைகள் இறந்துவிட்டால் யாரிடமும் சொல்லாமல் உடனே ஆம்புலன்ஸ் வைத்து அனுப்பிவிடுகிறார்கள்” என்றார்.

Previous Post

குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்த தாய்

Next Post

வட தமிழகத்தில் கனமழை வாய்ப்பு

Next Post
வட தமிழகத்தில் கனமழை வாய்ப்பு

வட தமிழகத்தில் கனமழை வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026

Recent News

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures