Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

300 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

September 21, 2019
in News, Politics, World
0

கார் நிக்கோபார் தீவு அருகே 300 கோடி ரூபாய் மதிப்பிலான கெட்டமைன் போதைப் போதை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த 19ஆம் தேதி அன்று, கார் நிக்கோபார் தீவு அருகே இந்தியக் கடலோர காவல் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜ்வீர் கப்பலில் இருந்தபடி அவர்கள் கடல் பரப்பை தீவிரமாகக் கண்காணித்தனர்.

அப்போது சந்தேகப்படும் படியாக ஒரு கப்பல் வருவதை அவர்கள் கவனித்தனர். உடனடியாக அந்தக் கப்பலை வழிமறித்து சோதனை நடத்திய போது, சாக்கு மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளுக்குள் சந்தேகப்படும் படியான பாக்கெட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணையில், மியான்மர் நாட்டில் இருந்து அந்தக் கப்பல் வருவது கண்டறியப்பட்டது. கப்பலை சிறைபிடித்த கடலோர காவல் படை வீரர்கள், போர்ட் பிளேர் கொண்டு சென்றனர். அங்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கப்பல் ஒப்படைக்கப்பட்டது.

அதனை ஆய்வு செய்ததில் 1160 கிலோ கெட்டமைன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு 300 கோடி ரூபாயாகும். கடத்தல் காரர்கள் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

Previous Post

இறந்த பிக்குவிற்கு கோவிலுக்குள் இறுதிச்சடங்கு – மக்கள் முறைப்பாடு

Next Post

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கும் தினம் குறித்து தகவல்

Next Post

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கும் தினம் குறித்து தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures