முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புரான ரஜமகா பௌத்த விகாரையை அமைத்துவந்த தேரர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தியை ஏற்கனவே அறிந்தோம்.
அவரின் இறுதிக் கிரியைகளை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகத் தெரியவருகிறது. இதனை அறிந்த ஊர் மக்கள் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடொன்றை செய்துள்ளனர்.