மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மது போதையில் வாகனம் செலுத்திய 2,280 சாரதிகள் ஒருவார காலத்திற்குள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அத்தோடு, நேற்று (11) காலை 6.00 மணியிலிருந்து இன்று (12) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்திற்குள் மது போதையில் வாகனம் செலுத்திய 243 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மது போதையில் வாகனங்களை செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த 05 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, கடந்த 05 ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 2,280 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.