Sunday, January 29, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2018ல் வடக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இராணுவமயத்திலிருந்து விடுபடும்! மங்கள

July 8, 2016
in News, Politics
0
2018ல் வடக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இராணுவமயத்திலிருந்து விடுபடும்! மங்கள
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

2018ல் வடக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இராணுவமயத்திலிருந்து விடுபடும்! மங்கள

எதிர்வரும் 2018ம் ஆண்டாகும்போது வடக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இராணுவத்தைக் குறைக்கும் செயற்பாடு நிறைவுசெய்யப்படும். அதாவது வடக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் இராணுவமயத்திலிருந்து விடுவிக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ராஜபக்ச அரசாங்கம் வடக்கில் மட்டுமல்ல நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தை பரப்பியுள்ளது. இதில் நாம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

கேள்வி:- இராணுவத்தை அகற்றும் செயற்பாடு தொடர்பில் ஜெனிவாவில் பேசியிருந்தீர்கள்? அது குறித்து சற்று விளக்க முடியுமா?

பதில்:- நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இராணுவத்தைக் குறைக்கும் செயற்பாட்டை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. வடக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இராணுவ மயத்திலிருந்து விடுவிக்கப்படும்.

தற்போதே வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் செயற்பாட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.குறிப்பாக அங்கு சிவில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

அதுவே இராணுவ மயத்திலிருந்து வடக்கு கிழக்கை விடுவிக்கும் ஒரு படிமுறைதான்.2018ம் ஆண்டுக்குள் வடக்கு உட்பட முழுநாட்டிலிருந்தும் இராணுவ ஈடுபாடு குறைக்கப்படும்.

ராஜபக்ச அரசாங்கம் வடக்கில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தை பரப்பியுள்ளது. இதில் நாம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். அந்த வகையில் 2018 ஆகும் போது இராணு வம் முழுமையாக குறைக்கப்படும்.

மேலும் தற்போதே பொது மக்களின் செயற்பாடுகளிலிருந்தும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்தும் விலகுமாறு இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதாவது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என இராணுவத்தினருக்கு கூறியுள்ளோம்.

இராணுவத்தினரும் அவ்வாறான செயற்பாடுகளிலிருந்து விலகிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர் .

எனவே 2018 ஆம் ஆண்டில் இந்த மாற்றத்தை மக்கள் காணலாம் என்றார்.

Tags: Featured
Previous Post

இளஞ்செழியன் தீர்ப்பிற்கு ஹுசைனின் அறிக்கையில் முக்கிய இடம்!

Next Post

ராம்குமார் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன.. வழக்கறிஞர் பகீர் தகவல்

Next Post
ராம்குமார் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன.. வழக்கறிஞர் பகீர் தகவல்

ராம்குமார் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன.. வழக்கறிஞர் பகீர் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வீதியில் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் | முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

January 29, 2023
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

January 29, 2023
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் | எம்.ஏ.சுமந்திரன்

January 29, 2023
காலநிலையில் திடீர் மாற்றம் | மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காலநிலையில் திடீர் மாற்றம் | மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

January 29, 2023

Recent News

யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வீதியில் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் | முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

January 29, 2023
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

January 29, 2023
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் | எம்.ஏ.சுமந்திரன்

January 29, 2023
காலநிலையில் திடீர் மாற்றம் | மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காலநிலையில் திடீர் மாற்றம் | மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

January 29, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures