Friday, June 20, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2009இல் பிரபாகரன் மறைக்கப்பட்டாரா ஒழிக்கப்பட்டாரா? – சிக்கலான தருணத்தில் மைத்திரி – மஹிந்த!

October 21, 2016
in News, Politics
0
2009இல் பிரபாகரன் மறைக்கப்பட்டாரா ஒழிக்கப்பட்டாரா? – சிக்கலான தருணத்தில் மைத்திரி – மஹிந்த!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

2009இல் பிரபாகரன் மறைக்கப்பட்டாரா ஒழிக்கப்பட்டாரா? – சிக்கலான தருணத்தில் மைத்திரி – மஹிந்த!

30 வருடங்கள் தொடர்ந்தும் யுத்த களத்தில் முன்னேற்ற பாதையில் பயணித்து வந்த விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்தில் திடீரென தோல்வியடைந்தும், சரணடைந்ததும் ஏன்?

உண்மையில் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன…? என்ற பல வகையான கேள்விகளுக்கு இன்று வரை பதில் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளாகவே காணப்பட்டு வருகின்றது.

சரணடைந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொல்லுமாறும், வெள்ளைக்கொடி பிடித்துவந்தவர்களையும் விட்டு விடாமல் சுட வேண்டும் எனவும் இராணுவத்திற்குஉத்தரவிடப்பட்டிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறினார்.

அதற்காக போர்க் குற்ற இரகசியங்களை வெளிப்படுத்தியதாக தெரிவித்து சரத் பொன்சேகாதண்டிக்கவும் பட்டிருந்தார் என்பது அறிந்ததே.

இதேவேளை வெள்ளைக்கொடியேந்திக் கொண்டு எவரும் வரவில்லை. அவ்வாறுவெள்ளைக்கொடியேந்தி வந்தார்கள் என்று கூறினால் அதை நாம் ஏற்கப்போவதில்லை என மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தற்போது தெரிவித்துள்ளார்.

அப்படி என்றால் பொன்சேகாவை ஏன் தண்டிக்க வேண்டும்? தனிப்பட்ட இலாபத்திற்காகவே அவர் தண்டிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? இன்னொருவர் இட்ட உத்தரவையே தான் நிறைவேற்றியதாக பொன்சேகா கூறினார்.

இதன்போது அந்த உத்தரவை இட்ட அந்த மர்ம நபர் யார்? உத்தரவை இட்டவர் தண்டிக்கப்படவோ அல்லது விசாரணை செய்யப்படவோ இல்லை.

அவ்வாறெனின் பொன்சேகா பொய்யான காரணத்திற்காகவே தண்டிக்கப்பட்டார் என்றே ஐயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சந்தேகம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவரே பொன்சேகா. அவரைப்பற்றி அவதூறான கருத்துகளை அவரின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து சேவையாற்றிய கமால் குணரட்ண தற்போது வெளிப்படுத்தி வருகின்றார் என்றால் அதுவும் ஒரு வகையான குற்றமே.

இதன்போது அவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதும் அவசியம். ஆனால் அவ்வாறு இடம் பெறவில்லை இதற்கு பின்னணியில் இருப்பவர் யார்?

மேலும் யுத்த நிலவரங்களைப் பற்றியே இவரும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றார். ஒரு வகையில் அதுவும் போர் இரகசியத்தை வெளிப்படுத்தும் செயலே.

இதன்போது கமாலை காப்பாற்றுவது யார்? அல்லது அவர் வெறும் அம்பாக இருந்து செயற்பட்டு வருகின்றார் என்றால் வில் யார்? எய்தவர் யார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளதாக அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் மைத்திரி “இரகசியத்தை வெளியிடுவேன்” என்று பகிரங்கமாக கூறியதன் பின்னரே நாட்டில் விடுதலைப்புலிகள் பற்றியும், பிரபாகரனின் மரணம் தொடர்பிலும் பல்வேறுபட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதும் உண்மையே.

இதேவேளை, யுத்த இரகசியங்கள் என்னிடம் இருக்கின்றது என சிலர் நினைத்தால், அவர்கள் அதை தெரிந்து கொள்ள என்னுடன் கல்லறைக்குத் தான் வர வேண்டும் என்றும் கமால் குணரத்ன கூறியுள்ளார். அப்படி அவர் மரணம் வரை கொண்டு செல்லும் இரகசியம் என்ன?

இதன் அடிப்படையில் சிந்திக்கும் போது இறுதியுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்படவில்லை, ஆனால் போர்க் குற்றம் இடம் பெற்றது, விடுதலைப்புலிகள் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டார்கள், போன்றவற்றை மறைமுகமாக அவர் கூற முற்படுவதாகவும், அதேசமயம் அதனை அவர் கூறினால் அவர் தண்டனை பெற வேண்டிய நிலை உண்டாகும்.

அதனால் யாராவது கூறி அதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் முயல்வதாகவும் கருத்துகள் கூறப்படுகின்றது.

இல்லாவிடின் தண்டனையும் வழங்கப்பட்டு முடிந்த விவகாரங்களை அவர் தற்போது வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் விடுதலைப்புலிகள் தொடர்பில் அதிகளவாக அவர் பேச வேண்டிய கட்டாயமும் இல்லை.

மேலும் நாடு தற்போது செல்கின்ற பாதையில் பலிவாங்கும் படலங்களே அதிகமாக காணப்பட்டு வருகின்றது. அரசியல் இலாபங்களுக்காக நீயா நானா எனும் போட்டி நிலவியுள்ள சூழ்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான போர் குற்றங்கள் வெளிவந்தால் யாருக்கு இலாபம் என்ற ரீதியில் பார்க்க வேண்டியுள்ளது.

மைத்திரியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு பொதுமக்களின் ஆதரவு அவசியம், அதேபோல் அரசியலில் தடுமாறிப்போயுள்ள கடந்த கால இலங்கையின் மன்னனாக வர்ணிக்கபட்ட மஹிந்த குற்றங்களில் இருந்து தப்பிக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

இதன்போது முழு நாட்டினையும் ஒருவருக்கொருவர் தம் பக்கம் ஈர்த்துகொள்ள அனைவருக்கும் இருக்கும் ஒரே விடயம் விடுதலைப்புலிகளே அதற்காக நாசூக்காக உண்மைகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன்போது யார் மீது போர் குற்றம் திரும்பும், யார் தண்டிக்கப்படுவார்கள்? நிரந்தர ஆட்சி அமைக்கப்போவது யார்? இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? பிரபாகரனின் மரணம் ஏற்படுத்திய சர்ச்சை போன்ற அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கொடுக்கப்படும்.

அதேவேளை இதனை யார் வெளிப்படுத்தப்போவது என்ற எதிர்ப்பார்ப்பே தற்போதுகாணப்படுவதாக அரசியல் அவதானிகள் கூறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: Featured
Previous Post

ஸ்டீபன் ஹாக்கிங்கின் புதிய ஆய்வுநிலையம்

Next Post

பாலச்சந்திரனை கொலை செய்ய உத்தரவிட்டது யார்.? வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

Next Post
பாலச்சந்திரனை கொலை செய்ய உத்தரவிட்டது யார்.? வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

பாலச்சந்திரனை கொலை செய்ய உத்தரவிட்டது யார்.? வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தென்னிலங்கை அரசியலில் திடீர் மாற்றங்கள் | மார்ச் ஐந்தில் களமிறங்கும் சந்திரிக்கா தலைமையிலான குழு

பாரிய நில மோசடி : சிக்குவார்களா முன்னாள் ஜனாதிபதிகள்..!

June 20, 2025
பொதுமக்களுக்கு பொறுப்பு கூறுதலை உறுதி செய்வதற்கு அமைச்சுக்களில் விசாரணைப் பிரிவுகள்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

June 20, 2025
திரைப்படமாகும் சாம்பாராக் இசையின் பிதாமகன் டார்க்கி நாகராஜாவின் சுயசரிதை

திரைப்படமாகும் சாம்பாராக் இசையின் பிதாமகன் டார்க்கி நாகராஜாவின் சுயசரிதை

June 20, 2025
நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘காயல் ‘ படத்தின் ப்ரீ ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘காயல் ‘ படத்தின் ப்ரீ ட்ரெய்லர் வெளியீடு

June 19, 2025

Recent News

தென்னிலங்கை அரசியலில் திடீர் மாற்றங்கள் | மார்ச் ஐந்தில் களமிறங்கும் சந்திரிக்கா தலைமையிலான குழு

பாரிய நில மோசடி : சிக்குவார்களா முன்னாள் ஜனாதிபதிகள்..!

June 20, 2025
பொதுமக்களுக்கு பொறுப்பு கூறுதலை உறுதி செய்வதற்கு அமைச்சுக்களில் விசாரணைப் பிரிவுகள்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

June 20, 2025
திரைப்படமாகும் சாம்பாராக் இசையின் பிதாமகன் டார்க்கி நாகராஜாவின் சுயசரிதை

திரைப்படமாகும் சாம்பாராக் இசையின் பிதாமகன் டார்க்கி நாகராஜாவின் சுயசரிதை

June 20, 2025
நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘காயல் ‘ படத்தின் ப்ரீ ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘காயல் ‘ படத்தின் ப்ரீ ட்ரெய்லர் வெளியீடு

June 19, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures