பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசிய லமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளு மன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணைய வுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவலை வெளி யிட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யின் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தவலை வெளியிட்டுள்ளன.
குறித்த அறிக்கையின்படி, இந்த திருத்தத்திற்கு ஆதரவு வழங்க எதிரணியின் சிறுபான்மை கட்சிகளின் பல உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் முடிவு களின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 இடங்களை வென்றுள்ளது, அவர்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் சேர்க்கப்படும்போது, அரசாங்கத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 150 ஆகும்.
இருப்பினும், சபாநாயகர் மஹிந்தா யபா அபேவர்தன சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து ஆளும் கட்சியில் தற்போதைய ஆசனங்களின் எண்ணிக் கை 149 ஆகவுள்ளது.
அதன் படி குறித்த திருத்தத்தை நிறைவேற்ற மேலும் பாரா ளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

