இலங்கை சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக சிகரட் தொகையொன்றை இலங்கைக்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 21 இலட்சத்து 57 ஆயிரத்து 400 ரூபாய் பெறுமதியான சிகரட் தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குருணாகலை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரும் மற்றும் அலுத்கம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை , சிங்கப்பூரில் இருந்து இலங்கை சென்ற 42 வயதுடைய நபரொருவரிடம் இருந்து சட்ட விரோத சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாரவில பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரிடம் இருந்து 1,010,000 ரூபாய் பெறுமதியான சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றைய நபர் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்துமாறு சுங்கம் உத்தரவிட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சிகரட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.