Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெலிக்கடை சிறைக்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்

October 23, 2021
in News, Sri Lanka News
0
வெலிக்கடை சிறைக்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்

சிறைக்கைதிகளை நசுக்கி அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும், அனைத்து கைதிகளையும் வேறுபாடின்றி சரிசமமாக நடத்தும்படியும் கோரி வெலிக்கடை சிறைக்கைதிகள் சிலர் இன்று (23) பிற்பகல் வேளையில் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு  தீர்வு கிடைக்காவிட்டால் சாகும்வரையில் உண்ணாவிரதம் போராட்டமொன்றை முன்‍னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தபோது, வெலிக்கடை சிறைச்சலை முன்றலுக்கு அம்புயலன்ஸ் வாகனமொன்றும் வந்து நிறுத்தப்பட்டதுடன், சிறைச்சாலையின் வாசல் காவலில் வழமைக்கும் அதிகமான சிறைச்சாலை அதிகாரிகள்  கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையால் அங்கு சற்று பரபரப்பு மிக்க சூழல் காணப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள சுமார் 20 வரையிலான சிறைக்கைதிகள் சிலர் பொரள்ளை கெம்பல்  மைதானத்திற்கு எதிர்த்திசையில் அமைந்திருக்கக்கூடிய சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூரைக்கு மேல் ஏறியிருந்த  குறித்த  சிறைக்கைதிகள் தமது கைகளில் பதாகைகள் மற்றும் கறுப்பு ,சிவப்பு நிறத்திலான கொடிக‍ளை தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பதாகைகளில், சிறைச்சாலை அதிகாரிகள் சிறை கைதிகளை நசுக்கி அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றனர்.

சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் வஞ்சகமான செயற்பாடுகள் குறித்து நாட்டின் தலைவர் மற்றும் மக்களது கண்கள் திறக்கட்டும் என்றும்,  ஜனாதிபதியே! சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகளான எங்களுக்கு வேறுபாடு எதுவும் காட்டாமல் சரிசமமாக நடத்தும்படியும், சகல சிறைக் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கும்படியும் அந்த பதாகைகளில் எழுதப்பட்டுள்ளன.

மேலும்,  இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வ‍ரை சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர்கள் ஏந்தியிருந்த பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இது முடிவல்ல ஆரம்பம் | ஒப்பாரி வைத்து சவப்பெட்டியை ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம்

Next Post

டி20 உலகக் கோப்பை- தென் ஆப்பிரிக்க அணியை 118 ரன்களில் கட்டுப்படுத்தியது ஆஸி

Next Post
டி20 உலகக் கோப்பை- தென் ஆப்பிரிக்க அணியை 118 ரன்களில் கட்டுப்படுத்தியது ஆஸி

டி20 உலகக் கோப்பை- தென் ஆப்பிரிக்க அணியை 118 ரன்களில் கட்டுப்படுத்தியது ஆஸி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures