திருகோணமலை வெருகல் கல்லடி தேவாலயத்தை படம் எடுத்த மூன்று இளைஞர்களை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.
ஈச்சிலம்பற்று,மற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 20,22 மற்றும் 31 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் வெருகல் பகுதியில் அமைந்துள்ள கல்லடி கிறிஸ்தவ தேவாலயத்தை அலைபேசியில் படம் எடுத்த போது அவ் தேவாலயத்தின் கிறிஸ்தவ அருட் தந்தையினால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

