யாழ்ப்பாணம் நல்லூர், சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (20) என்ற இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் திருமண நிகழ்வு ஒன்றுக்காக வெளியில் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற குறித்த மாணவி, கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மாணவி நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று முன் தினம் பதினொரு மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாணவி தூக்கிட்டமைக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.