தெற்காசிய நாடான, நேபாளத்தில் உள்ள லுக்லா விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம், அங்கு நின்றிருந்த ஹெலிகாப்டர்கள் மீது மோதியதில், மூன்று பேர் பலியாகினர்.
நேபாளத்தின் சொலுகும்பு மாவட்டத்தில், டென்சிங் – ஹிலாரி விமான நிலையம் என அழைக்கப்படும், லுக்லா விமான நிலையம் உள்ளது.
இங்குள்ள ஓடுதளம் மிகச் சிறியது. நிலப்பரப்பும், விமானங்கள் தரையிறங்கவும், புறப்பட்டுச் செல்லவும் சவாலானதாக இருக்கும்.
நேற்று காலை, இந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக பயணியர் விமானம், ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று, அருகில் நின்றிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில், ஓடுதளத்துக்கு அருகில் நின்றிருந்த, துணை விமானி மற்றும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பலியாகினர்.

