ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான மறைந்த பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு மரியாதை செலுத்தியதுடன், விகாரையில் உள்ள இளம் பிக்குகளுக்கும் விகாரையின் நிர்வாக சபையினருக்கும் மற்றும் தேரரின் மறைவினால் கவலையடைந்திருக்கும் மக்களுக்கும் இதன்போது தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
மறைந்த தேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.