நாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களில் யார் எந்த சர்வதேச சக்திகளின் பின்னால் உள்ளவர்கள் என்பதை அறிந்து, தெரிந்து மக்கள் தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த வேட்பாளர்களில் எவர் அமெரிக்காவின் சார்பில் இருக்கின்றார்? யார் சீனாவின் பின்னால் இருக்கின்றார்? என்பதை பார்த்தே மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும். இந்த இரு நாடுகளும் தமது நாட்டின் அதிகாரத்தை கையில் வைத்துக் கொள்வதற்கு போட்டிபோடுகின்றது.
இந்த இரு சக்திகளின் கைகளுக்கும் சிக்காது நாட்டின் இறைமையை தக்க வைத்துக் கொள்ள முடியுமான ஒரு தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.