காப்பி படங்களாக இருந்தாலும், ராஜா ராணி, தெறி, மெர்சல் என தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லீ. இவர் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் திருப்பதி எழுமலையானை சென்று வழிப்பட்டார் அட்லீ. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் திரையிடும் விதமாக ஒரு படத்தை எடுக்க உள்ளேன். அதற்கான வேலைகள் நடக்கிறது என்றார். தொடர்ந்து விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா என செய்தியாளர்கள் கேட்க, கட்டாயம் எடுப்பேன் என்றார்.
இதேப்போன்று நடிகை கீர்த்தி சுரேஷூம் இன்று எழுமலையானை தரிசித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாவித்ரி வேடத்தில் நடித்தது பெருமையாக உள்ளது என்றார். மேலும் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதாக வந்த செய்தி உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.